கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..! மஜக நிர்வாகிகள் ஆறுதல்…!!

image

image

கோவை.ஜூன்.08., கோவை உக்கடம் மஜீத் காலனியில் வசித்து வரும் சுலைமான் என்பவரின் மகன் சல்மான் (19) மற்றும் மகள் சக்கீலா பானு (16) ஆகியோர் நேற்று மின்சார விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்)

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் உடனடியாக அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், DRO, RDO மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர்.

அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாவட்ட  நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும் அக்குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்வதாக மஜக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தகவல்.
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
08-06-2017