வேலூர்.மார்ச்.09., குடியாத்தம் நகரத்திற்கு உட்பட்ட 8ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் சில நாட்களுக்கு முன்பு தெருவிளக்குகளை சரி செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே சரிசெய்து கொடுக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று குடியாத்தம் 8ஆவது வார்டு பகுதிகளில் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING வேலூர் மாவட்டம். 09.03.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…
திருவள்ளூர்.மார்ச்.08., திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் 07.03.17 அன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இன்ஷா அல்லாஹ் மார்ச் 31ம் தேதி ஆவடியில் எழுச்சி பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், அதே போல் ஏப்ரல்.21 அன்று அம்பத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது திருவள்ளுர் பகுதியில் வக்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனத்திடமிருந்து வக்பு இடத்தை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப் பட்டது இக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பகுர்தீன், ஆவடி நகர நிர்வாகிகள் மற்றும் பூவை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழிநுட்ப அணி. #MJK_IT_WING திருவள்ளூர் (மே) மாவட்டம். 07.03.2017
மஜக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை (கி) சார்பில் மரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு…
நெல்லை.மார்ச்.08., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வை கொண்டாடும் வகையில் தலைமை அறிவுறுத்தளின் பேரில் நகரத்தின் முக்கிய இடங்களில் மரமாகவும், மரகன்றுகளாகவும் மற்றும் மூலிகை செடிகள் நாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) நெல்லை கிழக்கு மாவட்டம். 08.02.2017
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக மாணவர், பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை அலைக்கும் நிகழ்வு நேற்று மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜகவின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்களும் சென்றார்கள். சென்ற இடங்களில் மாணவர் இந்தியா அமைப்பினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெருமையாகவும் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம். 08.02.2017
வெற்றி…! வெற்றி…! எல்லா புகழும் இறைவனுக்கே…
நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வளத்தூர்(1), பள்ளிகொண்டான்(1), குடியாத்தம்(2), திருப்பத்தூர்(1), ஓசூர்,கிருஷ்ணகிரி(9), விழுப்புரம்(1) ஆகிய அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 905 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி தந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா மற்றும் மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் : மாணவர் இந்தியா ஊடக பிரிவு, தலைமையகம் சென்னை. 07.03.2017