மஜகவின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் நகரில் தெருவிளக்கு சீரமைக்கும் பணி…

image

image

வேலூர்.மார்ச்.09., குடியாத்தம் நகரத்திற்கு உட்பட்ட 8ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் சில நாட்களுக்கு முன்பு தெருவிளக்குகளை சரி செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே சரிசெய்து கொடுக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று குடியாத்தம் 8ஆவது வார்டு பகுதிகளில் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு மஜக சார்பில் நன்றிகள் பல…

தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
#MJK_IT_WING
வேலூர் மாவட்டம்.
09.03.2017