சனையா.மே.29., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட மத்தார் கதீம் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிய உறுப்பினர்கள் மஜகவில் இணைந்தனர். இந்த சந்திப்பின் போது வருகிற ஜூன் 1 அன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தகவல்: #MKP_IT_WING #MKP_சனையா_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்.
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
அபுதாபி பனியாஸ் கிளை MKP ஆலோசனை கூட்டம்..!
அமீரகம்.மே.14. கடந்த வெள்ளிக்கிழமை (11-05-2018) அன்று அபுதாபி மண்டல பனியாஸ் கிளையின் மஜகவின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் லால்பேட்டை. சாதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை. ஹாஜி S. A. முஹம்மது தையூப், மக்கள் தொடர்பாளர் (PRO) அடியற்கை. தமீமுன் அன்சாரி, அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி மற்றும் பனியாஸ் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் வரும் ஜூலை 2 ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மஜக பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அமீரகம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அனைவரும் அவரை கண்டு உரையாட ஆவலாக இருப்பதாகவும், இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைய அனைவரும் பாடு படுவதாக தெரிவித்தனர். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #அபுதாபி_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம்
கத்தாரில் மாரடைப்பால் இறந்த சகோதரர் இளங்கோவன்..! குடுப்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக மாநில பொருளாளர்..!
இராமநாதபுரம்.மே.14., கத்தாரில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரண தருவாயிலிருந்துள்ளது, உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். கத்தார் நிர்வாகிகள் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் இன்று அல்லது நாளை செவ்வாய்க்கிழமை அன்று சொந்த ஊருக்கு வரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (13.05.2018) தோழர். இளங்கோவன் அவரது வீட்டிற்கு சென்று குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் , நகர செயலாளர் ஷாகுல் ஹமீது,
MKP துபை மண்டல ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!
துபாய்.மே.12., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை துபை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று ( 11/05/2018) வெள்ளிக்கிழமை மாலை அல்பரஹா பார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக MKP செயலாளர் மதுக்கூர். அப்துல் காதர் தலைமை வகித்தார், அமீரக பொருளாளர் அதிரை.அஸ்ரப் அலி மற்றும் அமீரக துணை செயலாளர்கள் அபுல் ஹசன், Y.அப்துல் ரெஜாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்தெடுக்கபட்டுள்ளது. மண்டல செயலாளர் : லால்பேட்டை B.ரஹ்மத்துல்லாஹ்., மண்டல பொருளாளர் : லால்பேட்டை V.சபீக் ரஹ்மான்., மண்டல துணை செயலாளர்கள் : பண்டாரவாடை A.ஷாஹுல் ஹமீது (எ) ஆசிப் நாகர்கோவில் சித்திக். தோப்புத்துறை H.ஹம்தான் கட்டிமேடு ஜாஹிர் ஹுசைன் காயல்பட்டினம் J.முகம்மது சபீர் அலி அதிரை A.B.ஷாஹுல் ஹமீத் புலிவலம் M.ஜகபர் சாதிக் லால்பேட்டை M.Y.முகம்மது ஜாசிம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர், எனவே அனைத்து மண்டல நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்
கத்தார் MKPயின் முக்கிய அறிவிப்பு..!
கத்தார்.மே.12., கத்தாரில் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) என்பவர் கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரணதருவாயிலிருந்துள்ளது உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு கத்தார் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரணையை தொடங்கச்சொல்லி அவரின் நண்பர்கள் மற்றும் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தினர். கத்தார் #மனிதநேய_கலாச்சார_பேரவை-யின் சகோதரர்கள் இறந்தவரின் முதழாலியை கண்டு அவரின் உதவியோடு அனைத்தையும் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். இதுவரை களத்தில் நின்று ஏறக்குறைய அணைத்து வேலைகளும் முடித்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவரது உடல் இறைவனின் உதவியோடு மதுரை விமான நிலையம் வந்து