“நீட் தியாகி” கிருஷ்னசாமி உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் மரியாதை!

திருவாரூர்.மே.07., நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்று, மாராடைப்பால் உயிரிழந்த கிருஷ்னசாமி அவர்களின் உடல், அரசு உதவியுடன் விளக்குடி கிராமத்திற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது.

கோவைக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில், இன்று காலை #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் “நீட் தியாகி” கிருஷ்னசாமி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உடனிருந்தார்.

பொதுச்செயலாளரிடம் கிராம மக்கள் அவர் எடுத்த முன்முயற்ச்சிகளுக்கு நன்றியை கூறினர். அவரது இறுதி சடங்கு நாளை செவ்வாய்கிழமை காலை நடைப்பெற இருக்கிறது.

இதில் பல்வேறு தலைவர்களும், நீட் எதிர்ப்பு போராளிகளும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவருக்கு அஞ்சலி செலுத்தி திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

தகவல்;
#MJK_IT_WING,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#மஜக_திருவாரூர்_மாவட்டம்.