மஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட 10 வது நாளில் முதல் கட்ட துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இன்று சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது முதல் கட்ட துண்டு பிரசுரத்தை முறைப்படி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட, துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி 8- முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாருக், பெற்றுக் கொண்டார். விரைவில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கான ஸ்டிக்கர், கதவுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர், விழிப்புணர்வு பரப்புரைக்கான துண்டு பிரசுரம், சுவரொட்டி ஆகியன வெளியிடப்பட உள்ளது. தமிழகமெங்கும் வரையப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் பெரும் பரபரப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாயின்ஷா , ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் மஹ்பூப் அலி, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 17.12.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. ஷாநவாஸ், அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சத்தியமங்கலம் நகரத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நசீர், வர்த்தக அணி பொருளாளர் பஷீர் சிராஜ், நகரச் செயலாளர் சலீம், நகர பொருளாளர் சையத் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் ஆஷிக், இளைஞரணி செயலாளர் ரபீக், துணைச் செயலாளர் இலியாஸ், மாணவர் இந்தியா துணைச் செயலாளர் ஹாரூன், 12வது வார்டு பொறுப்பாளர் பாபு பாய் , உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 16.12.2021
நெய்வேலி NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் தொழிலாளி மரணம்..! காத்திருப்பு போராட்டத்தில் மஜக பங்கேற்பு..
நெய்வேலி NLC நிறுவனத்தில் பணிபுரிந்த இளங்கோவன் என்பவர் கடந்த 14-12-2021 அன்று வேலை செய்து கொண்டிருக்கையில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அலட்சிய போக்குடன் NLC நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்வெட்டும் இயந்திர வண்டியில் ஏற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இளங்கோவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவசரகால முதலுதவிக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்ககோரியும் அனைத்து கட்சி சார்பாக ஆலையின் சுரங்கம் 2க்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பாபர் ஒளி,
ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம்! திருப்பூர் தெற்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ஆஷிக், ஈஸ்வரன், நெளபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் ஆஷிக் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_தெற்கு_மாவட்டம் 15.12.2021
ஜனவரி.08 கோவை சிறை முற்றுகை.. மஜக அணி நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேராய்வு…
கோவையில் ஜனவரி 8, 2022 அன்று நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில், மஜகவின் முக்கிய அணிகளின் திட்டமிடல்கள் தொடங்கியுள்ளது. தலைமையகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இது குறித்து கலந்துரையாடினார். மருத்துவ சேவை அணி சார்பில் போராட்ட களத்தில் ஆம்புலன்ஸ் சேவைகளை மேற்கொள்வது என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ சேவைக்குழு ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருப்பது என்றும், இதில் சீருடையுடன் மருத்துவ சேவை அணியினர் பங்காற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இளைஞர் அணி சார்பில் சீருடை அணிந்த இளைஞர் பட்டாளம் பாதுகாப்பு, கட்டுக்கோப்பு உள்ளிட்ட களப் பணிகளில் ஈடுபடுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. மாணவர் இந்தியா சார்பில் கலைக்குழு அமைக்கப்பட்டு பரப்புரைகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இந்த அணிகளின் சார்பில் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும், அடுத்தடுத்து திட்டமிட்டு பணிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ReleaseLongTermPrisoners #தலைமையகம்