ஜனவரி.08 கோவை சிறை முற்றுகை.. மஜக அணி நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேராய்வு…

கோவையில் ஜனவரி 8, 2022 அன்று நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில், மஜகவின் முக்கிய அணிகளின் திட்டமிடல்கள் தொடங்கியுள்ளது.

தலைமையகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இது குறித்து கலந்துரையாடினார்.

மருத்துவ சேவை அணி சார்பில் போராட்ட களத்தில் ஆம்புலன்ஸ் சேவைகளை மேற்கொள்வது என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய மருத்துவ சேவைக்குழு ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருப்பது என்றும், இதில் சீருடையுடன் மருத்துவ சேவை அணியினர் பங்காற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இளைஞர் அணி சார்பில் சீருடை அணிந்த இளைஞர் பட்டாளம் பாதுகாப்பு, கட்டுக்கோப்பு உள்ளிட்ட களப் பணிகளில் ஈடுபடுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

மாணவர் இந்தியா சார்பில் கலைக்குழு அமைக்கப்பட்டு பரப்புரைகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

விரைவில் இந்த அணிகளின் சார்பில் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும், அடுத்தடுத்து திட்டமிட்டு பணிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ReleaseLongTermPrisoners
#தலைமையகம்