ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டம்! திருப்பூர் தெற்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருப்பூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு
திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ஆஷிக், ஈஸ்வரன், நெளபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் ஆஷிக் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி அபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_தெற்கு_மாவட்டம்
15.12.2021