நெய்வேலி NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் தொழிலாளி மரணம்..! காத்திருப்பு போராட்டத்தில் மஜக பங்கேற்பு..

நெய்வேலி NLC நிறுவனத்தில் பணிபுரிந்த இளங்கோவன் என்பவர் கடந்த 14-12-2021 அன்று வேலை செய்து கொண்டிருக்கையில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அலட்சிய போக்குடன் NLC நிர்வாகத்தினர் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்வெட்டும் இயந்திர வண்டியில் ஏற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இளங்கோவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அவசரகால முதலுதவிக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்படும் NLC நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கால் உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்ககோரியும் அனைத்து கட்சி சார்பாக ஆலையின் சுரங்கம் 2க்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பாபர் ஒளி, நெய்வேலி நகர செயலாளர் ஆதம் சேட் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
16.12.2021