டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனவரி 8 அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று முற்றுகை போராட்டம் தொடர்பான முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், HM.ஹனீபா, ஆகியோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.12.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
சங்காரபுரத்தில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு! அரசு வேலை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! மஜக மாநில துணைசெயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை நிகழ்த்தினார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கோரமான வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், நிவாரண தொகையினை அதிகப்படுத்த கோரியும், விபத்துக்கு காரணமான அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை கோரியும் அனைத்து கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் ஜாவித் , திருக் கோவிலூர் நகர செயலாளர் சாதிக் பாஷா, சங்கராபுரம் ஷேக் அப்துல்லா, கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சலீம் , மங்கலம் பேட்டை நகர செயலாளர் ரியா பரீத், மற்றும் திருக்கோவிலூர் மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 01.11.2021
கன்னியாகுமரியில் பாசிச ஒன்றிய அரசை எதிர்த்து மஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அசாமில் நடந்த அரச பயங்கரவாதத்தை கண்டித்தும், லக்மிபூர் விவசாயிகள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்தும், இளைஞர்களை வழி கெடுக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கோரியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்ப.பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ML) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணி முத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநகர செயலாளர் இடலை சாகுல், கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹிமாம் பாதுஷா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஆகியோர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர்
உபியில் ஃபாஸிஸ்ட்டுகளால் விவசாயிகள் படுகொலை.. தஞ்சையில் அலைபேசி விளக்குகளை எரியவிட்டு இரங்கல்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கும்பூரில் #பாஜக மற்றும் அவர்களின் ஆதரவு கும்பலால் #விவசாயிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கிளர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் விவசாயிகளை திட்டமிட்டு வாகனம் ஏற்றி சொல்லும் வீடியோ காட்சிகள் வலைதளங்கள் மூலம் பரவி கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது இச்சம்பவத்திற்கு தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தின. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதனிடையே தமிழக விவசாயிகளின் இதயப் பகுதி என கருதப்படும் டெல்டாவில், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னோட்டமாக ஒன்றுபட்ட டெல்டா வின் தலைநகரான தஞ்சாவூரில் இரங்கல் நிகழ்வை முன்னெடுத்துள்ளது. உ.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்து இன்று தஞ்சை ரயிலடியில் ° அலைப்பேசி விளக்குகளை எரியவிட்டு "இரங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, விவசாய சங்க பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். அனைவர் கரங்களிலும் ஃபாசிஸ்ட்டுகளை கண்டிக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தினாலான பதாகைகளை தூக்கி நின்றனர். குறுகிய கால ஏற்பாட்டிலும், பெண்களும்
தஞ்சையில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
காந்தியடிகளின் 183-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று தஞ்சாவூரில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். இதில் காங்கிரஸ் CPM, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, மஜக, அகில இந்திய கிருத்தவ கூட்டமைப்பு, முஸ்லிம் லீக், MMMK, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட பொரு லாளர் M.அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு (எ) ஹபிபுர் ரஹ்மான், மாநகர பொறுப்பாளர்கள் காமில், சாகுல், ஜாகீர் உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம் 02.10.2021