You are here

ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனவரி 8 அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தில் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று முற்றுகை போராட்டம் தொடர்பான முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், HM.ஹனீபா, ஆகியோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12.12.2021

Top