You are here

ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! தென்காசி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்.

டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அதம்பின் ஹனிபா, மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனையத்துல்லா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் அச்சன்புதூர் அன்வர், இளைஞரணி துணைச் செயலாளர் தர்வீஸ் மைதீன், சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் சேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் சிலம்பாட்டம் சாகுல், கடையம் ஒன்றியச் செயலாளர் சுலைமான் ஹாஜி, வடகரை பேரூர் கழகச் செயலாளர் முகம்மது அலி, அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் முகம்மது நாசர் , துணை செயலாளர் சேக் முகம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
12.12.2021

Top