நாகை. ஏப்.18., நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு கிருஸ்துவ அமைப்பு ஒன்றிணைந்து, தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மஜக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற உந்துதலில் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடெங்கிலும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவாலயங்களை தாக்குகின்றார்கள். கிருஸ்துவர்கள்தான் நம் நாட்டிற்க்கு கல்வியையும், மருத்துவமனைகளையும் கிராமங்கள்வரை கொண்டு சேர்த்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம், வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மை் மக்களை அணித்திரட்டலாம் என நம்புகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்ளுக்கும் பெரும்பான்மையான இந்து சமுதாய மக்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்து ஏக்தா மர்ச் என்ற அமைப்பினர் காஷ்மீரில் கோவிலில் வைத்து 8 வயது ஆசிபா என்ற குழந்தையை சீரழித்து இருக்கிறார்கள். இந்த படுபாவிகளுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த நாட்டில் உள்ள இந்துகளும், உலக
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
ஆசிபாவுக்கு நீதி கேட்டு மஜக ஆர்ப்பாட்டம்! உணர்ச்சிவசப்பட்டு முழக்கம் எழுப்பிய போலீஸ்காரர்!
சென்னை. ஏப்.16., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் #நீதிகேட்டு_போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழங்கியபோது , உணர்ச்சி வசப்பட்ட ஒரு போலீஸ்காரர் அவரும் முழுக்கம் எழுப்பி கலங்கினார். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். அதில்'அடுத்தது நாங்களா மோடி' என்ற வாசகம் பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சாலை வழியே சென்ற பொது மக்களும் அப்படியே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் கப்பிய முகத்தோடு நின்றனர். இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு MLA, இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா, சமாஜ்வாடி கட்சி தலைவர் டெல்டா விஜயன், பாரத மக்கள் இயக்கத்தை சேர்ந்த உமாராணி, மஜக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S அலாவுதீன், மாநில
மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டித்தும், பொய் வழக்கை திரும்பபெற்று மஜகவினர் உட்பட அணைவரையும் விடுதலைசெய்ய கோரியும், தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக உத்தமபாளையம் பைபாஸில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையேற்க்க, மாவட்ட பொருளாளர் சேக் பரீத் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், பாளையம் தமீமுன் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் முன்னிலைவகுத்தனர். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் E.அபுதாஹிர் அவர்களும், முஸ்லிம் யூத் லீக் தேனி மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹீம் உஸ்மானி அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தேனி_மாவட்டம் 15.04.18
காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஏப்.13., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலயை மூட கோரியும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னணி அமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழ்நாடு கொங்கு இளைஞர்ப் பேரவையின் நிறுவனத்தலைவர் தனியரசு MLA ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இவர்களுடன், மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…!!
கிருஷ்ணகிரி. ஜன.11., மத்திய மதவாத அரசை கண்டித்து ஓசூரில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக பொருளாளர் அவர்களின் கண்டன உரையில் குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். இஸ்லாம் வழங்ககூடிய ஷரியத் சட்டம் அழகிய வாழ்வியல் நெறிமுறையை சூட்டிக்காட்டியிக்கிறது. இது போன்ற அழகிய சட்டங்கள் எந்தவொரு மார்க்கத்திலும் கிடையாது என்றும் இந்த சட்டத்தை உணர்ந்த பிற சமூக மக்களும் ஷரியத் சட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெளிவாக பேச்சில் சுட்டிக்காட்டினார். இதில் மஜகவின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் அமீன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட பொருளாளர் சையத் நாவஸ், தலைமை