ஜன.20., ஜல்லிக்கட்டுக்கு எதிராக மல்லுக்கட்டும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் முன்னெடுக்கும் அறப்போர் அமைதி வழியில் வெல்லட்டும்! மாணவர்_இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆதரவு மேலும் பெருகட்டும்! பெரியார், அண்ணாவின் கனவுகளை வெல்லவும், தமிழ்நாட்டின் உரிமைகள் மலரவும், "மத்தியில் கூட்டாட்சி_மாநிலத்தில் சுயாட்சி" என்ற முழக்கம் ஓங்கவும் இப்போர்களம் வழிகாட்டட்டும்! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! எம் தமிழ் இனத்தின் போராட்டம் வாழ்க!வாழ்க!வாழ்க! இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21_01_16
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
அண்ணன் ம.நடராஜன் அவர்களின் கருத்து கூர்ந்து கவனிக்கத்தக்கது
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணைய தள பதிவு) நேற்று(16-01-2017) தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் அண்ணன் ம.நடராஜன் அவர்களின் பேச்சு தமிழக அரசியலில் புதிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசும், பாஜகவும் தமிழக அரசை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வலுப்பெற்று வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் தருணத்தில் சோ அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று பேசி சர்ச்சையை உருவாக்கினார். இந்நிலையில், அண்ணன் ம.நடராஜன் அவர்கள், தமிழக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் RSS சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் RSS சார்பு சுதேசி இயக்கத்தில் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பிராமண நண்பர்கள் உண்டு என்றும், பாஜக ஆதரவு பிராமணர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் குமுறியுள்ளார். சாதி,மதம் பேதமில்லாத தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கப்பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவெனில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) உலகமெங்கும் வாழும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வயலில் ஏர் பூட்டி; சேறு மிதித்து; விதை விதைத்து; விவசாயம் வளர்த்து; அதன் அறுவடையை கொண்டாடும் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சிக்குரிய தினமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் இனத்தின் பொதுப் பண்டிகையை, இடைக்காலத்தில் சிலர் வழிபாட்டு ரீதியாக திசை மாற்றினார்கள். இன்று புத்தெழுச்சிமிக்க தமிழ் தலைவர்களாலும், அறிஞர்களாலும் பொங்கல் பண்டிகை சார்பற்ற -வழிபாடுகளற்ற-அறுவடைத் திருநாளாக - சமத்துவ பொங்கலாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர் விளையாட்டாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தல், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், நீராதாரங்களை பாதுகாத்தல் ஆகிய உயரிய லட்சியங்களை நிறைவேற்ற இந்நாளில் சபதம் ஏற்போம்! தமிழர் ஒற்றுமைக்காக பாடுபடுவோம்! உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி(MJK). 13/01/2017
திண்டுக்கல்லில் தடையை மீறி மஜக ஜல்லிக்கட்டை நடத்தும்.
மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு இன்று மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் திரள் போராட்டத்தை நடத்தினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதின் சுருக்கம் பின்வருமாறு தமிழ்ச் சமுதாயத்தின் உறவுகளே.... தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமை காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இங்கு தேவரையாவின் வாரிசுகள், தீரன் சின்னமலையின் வாரிசுகள், காயிதே மில்லத்தின் உறவுகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழ் இன ஒற்றுமைக்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைப்போம். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு, உலகம் முழுக்க வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெறுகிறது. தாய்லாந்து, ஸ்பெயின், மெக்ஸிகோ, நியுசிலாந்து என பல நாடுகளில் உள்ளது. வெளிநாடுகளில் போட்டி முடிந்ததும் காளைகளை கொன்று விடும் பழக்கம் உள்ளது. ஆனால் இங்கு போட்டி முடிந்ததும் காளைகளுக்கு பரிசளித்து கொண்டாடுகிறோம். ஆனால்,காளைகளை வதை செய்கிறோம் என்கிறார்கள், கேரளாவில் 100 யானைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.யானைகளை இதற்காக இம்சிக்கிறார்கள்.இதை உங்களால்
மாணவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு ) மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தையும் வழி நடத்தியது. சந்தைப் பொருளாதார யுகம், தகவல் தொழில்நுட்ப மோகம் என உலகம் மாறிய தருணத்தில் 1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகள் மாணவர் போராட்டங்கள் காணாமல் போயின. 2010ல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மாணவர் சமூகம் சோம்பல் முறித்து களமிறங்கியது. லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர்கள் மூட்டிய நெருப்பு தமிழ்நாட்டை அனலாக்கியது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் சமூக இணைய தளங்களின் வழியாக தன்னெழுச்சியாக மாணவர்கள்-இளைஞர்கள் அணிதிரண்டு அனைவரையும் அதிர வைத்தனர். அது மதுரை, நெல்லை, கோவை என தொடங்கி எங்கும் பற்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க புரட்சிகர போக்காகும். பொது விவகாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும் களமிறங்கினால் நேர்மையான அரசியலும், நாகரிகமான பொதுவாழ்வும் வலுப்பெறும். நேர்மையான தலைவர்கள் வலிமைப்பெறவும், புதிய தலைவர்கள் உருவாகவும் வழிப்பிறக்கும். எனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்,