தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி)

உலகமெங்கும் வாழும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வயலில் ஏர் பூட்டி; சேறு மிதித்து; விதை விதைத்து; விவசாயம் வளர்த்து; அதன் அறுவடையை கொண்டாடும் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சிக்குரிய தினமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் இனத்தின் பொதுப் பண்டிகையை, இடைக்காலத்தில் சிலர் வழிபாட்டு ரீதியாக திசை மாற்றினார்கள். இன்று புத்தெழுச்சிமிக்க தமிழ் தலைவர்களாலும், அறிஞர்களாலும் பொங்கல் பண்டிகை சார்பற்ற -வழிபாடுகளற்ற-அறுவடைத் திருநாளாக – சமத்துவ பொங்கலாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழர் விளையாட்டாம் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தல், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், நீராதாரங்களை பாதுகாத்தல் ஆகிய உயரிய லட்சியங்களை நிறைவேற்ற இந்நாளில் சபதம் ஏற்போம்! தமிழர் ஒற்றுமைக்காக பாடுபடுவோம்!

உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி(MJK).
13/01/2017