சென்னை.ஜூன்.15., இன்று சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது காலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் சந்தித்தனர். அப்போது மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதும், மீத்தேன் எடுப்புக்கு எதிராக போராடி வரும் பேரா. ஜெயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தி பேசினார்கள். நேற்றைய தினம் இது குறித்து இருவரும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சென்னை. #MJK_IT_WING 15.06.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
மஜக பொதுச் செயலாளருடன் SDPI தலைவர்கள் சந்திப்பு…
சென்னை.ஜூன்.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை MLA விடுதியில் SDPI கட்சியின் தலைவர் ஜனாப்.தெஹ்லான் பாகவி அவர்கள் தனது சக நிர்வாகிகளுடன் வருகை தந்து சந்தித்தார். பொதுச் செயலாளரின் உடல் நலன் விசாரித்தவர், பொதுவாழ்வில் ஏற்படும் துன்பங்களை தைரியத்துடன் கடந்து போகவேண்டும் என்றும் உற்சாகமூட்டி பேசினார். முக்கால் மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், சமுதாய பணிகள் குறித்தும் நல்லெண்ண அடிப்படையில் கருத்துகள் பறிமாறப்பட்டது. இச் சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை #MJK_IT_WING 15.06.2017
தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாடு விற்பனை குறித்து தனிநபர் தீர்மானம் கொடுத்திருக்கிறார்! பரிசிலிப்பதாக சபாநாயகர் பதில் !!
சென்னை.ஜூன்.14., இன்று சட்டசபை கூடுவதற்கு முன்பாக சபாநாயகர் அறைக்கு சென்ற ம ஜ க பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாடு விற்பனை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தான் கொடுத்த தனி நபர் தீர்மானத்தை பரிசிலிக்க வேண்டும் என்று கூறினார், அப்போது அங்கு வந்த முதல்வரிடமும் இது குறித்து கூறினார். பிறகு சபை நடைபெற்ற போது, 11:50 மணியளவில் இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேச எழுந்தார். பேரவை தலைவர் அவர்களே…நாடு முழுக்க பரபரப்பாக பேசப்படும் விவகாரம் குறித்து அவையில் பேச விருக்கிறேன் என்றார். அப்போது சபாநாயகர் அவர்கள், அன்சாரி நீங்கள் காலையில் என்னிடம் பேசிய விவகாரம் குறித்து பேசவிரும்பினால் இப்போது வேண்டாம். அது பரிசீலனையில் உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அமருங்கள் என்றார். மாடு விற்பனை குறித்து தமிமுன் அன்சாரி அவர்கள் கொடுத்திருக்கும் தனிநபர் தீர்மானம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது என இதன் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சக MLAக்களிடமும் ஆதரவு
காந்தி மீண்டும் படுகொலை?
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களின் சமூக இணையதள பதிவு) பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் , பிரதமர் மோடியின் மனசாட்சி ஆவார் . மோடியின் எண்ண ஓட்டங்கள் பிரதிபலிப்பவர். இப்போதைய அவரது காந்தி குறித்த கருத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது . நேதாஜி, அம்பேத்கார் , பகத்சிங் ஆகியோரின் விவகாரங்களில் காந்தியின் மீது நமக்கும் பல அரசியல் விமர்சனங்கள் உண்டு . ஆயினும் அவர் அனைவருக்குமான ஒரு தலைவர் என்பதிலும் அகிம்சை எனும் புதிய கொள்கை மூலம் இந்தியாவுக்கான புதிய அடையாளத்தை உருவாக்கியவர் என்பதிலும் ஐயமில்லை. இந்திய விடுதலைக்கு அவரது தலைமை தான் இறுதி வடிவத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் நல்லிணக்கமிக்க ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டி அதில் உறுதியாக செயல்பட்டார். அதனாலேயே RSS அமைப்பின் ஆதரவாளரான கோட்சே அவரை கொலை செய்தான். காந்தியாரின் மீதான காழ்ப்புணர்ச்சி, கோட்சேயின் கொள்கை வழி பேரப்பிள்ளைகளிடம் இது மிக அதிகமாக இருக்கிறது. அந்த காவிக்கோபத்தில்தான் மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரியை தாக்கினார்கள் . அதன் இன்னொரு வடிவமாக பா ஜ க தலைவர் அமித்ஷா அவர்கள் காந்தியை ஒரு வியாபாரி என்று
நாகை தொகுதியில் சிறப்புடன் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் MLA அலுவலகத்தின் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. EGS பிள்ளை கல்லூரியின் வளாகத்தில் பிரம்மாண்டமான கலையரங்கம் ஆண்கள், பெண்கள் என நிரம்பி வழிந்தது. கொடிகள், தோரணங்கள், விளம்பர பதாகைகள், ஆள் உயர தட்டிகள் எதுவுமின்றி அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துக் கொண்ட நிகழ்வாக இருந்தது. கோயில் குருக்கள், பாதிரியார்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் என பல தரப்பினரும் ஒற்றுமையாக அமர்ந்து உரையாடி மகிழ்ந்தனர். மாவட்ட அமைச்சர் மாண்புமிகு O.S.மணியன், மாவட்ட ஆட்சியர் S.சுரேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் ஆகியோர் வந்திருந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. காரணம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் அமர்வதில்லை. ஆனால் இந்த இஃப்தார் தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைந்துவிட்டது. மேலும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால், பூம்புகார் MLA பவுன்ராஜ், சீர்காழி MLA பாரதி, மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வருகை தந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் அவர்கள் வருகை தந்து தனது தோழமையை வெளிப்படுத்தினார். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் ஒருவர் விடாமல் கலந்துக் கொண்டது நிகழ்ச்சியின்