திருமுருகன், பேரா. ஜெயராமன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்…! முதல்வருக்கு தமிமுன் அன்சாரி, தனியரசு நேரில் கடிதம்…!!

சென்னை.ஜூன்.15., இன்று சட்டசபை நடைபெற்று கொண்டிருக்கும் போது காலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதும், மீத்தேன் எடுப்புக்கு எதிராக போராடி வரும் பேரா. ஜெயராமன் மீதும் போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தி பேசினார்கள்.

நேற்றைய தினம் இது குறித்து இருவரும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சென்னை.
#MJK_IT_WING
15.06.2017