(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணைய தள பதிவு) ஈதுல் ஃபித்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை எதிர் நொக்கி முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். அன்று கவலைகள், கோபங்கள், தவறான எண்ணங்கள் ஆகியவற்றை மறந்து வாழ்த்துக்களை பரிமாரிக் கொள்கின்றோம். ஆனால் பண்டிகை என்றாலே குழந்தைகளும், சிறுவர், சிறுமியர்களும் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பாகவே கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். எனவே ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்குவதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை, பண்டிகைகளின் நோக்கத்தை அடைய முடியும். இதை எல்லா மதத்தினரும் அவர் அவர் பண்டிகைகளின் போது செய்ய வேண்டும். அந்த வகையில் எதிர்வரும் நோன்பு பெருநாளைக்கு ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தாடைகளை வழங்க வசதி உள்ளவர்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முதலில் உறவினர்களில் உள்ள குழந்தைகளுக்கு முன்உரிமை கொடுக்க வேண்டும் பிறகு நமது வீதிகளிளும், நமது குடியிருப்பு பகுதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் கண்டு கொடுக்கலாம். இந்த மனித நேய பணியில் ஈடுபடும்போது குழந்தைகளின் சுயமரியாதை, அவர்களின் குடும்பங்களின் கண்ணியம் ஆகியவை பாதிக்கபடாமல் வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதையும்,ஆடை அளவுகளையும்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நிலா நிலா பாடலில் திரிவு செய்யப்பட்ட வரிகளில் திருத்தம் தேவை .! சட்டசபையில் ம.ஜ.க பொதுச் செயலாளர் கோரிக்கை…
(கடந்த 15.06.17 அன்று கல்வி மானிய கோரிக்கையில் மஜக பொதுச் செயலாளர் சட்டப்பேரவையில் பேசிய பாகம்-2) நிலா,நிலா ஓடி வா... என்ற பாடல் நமது மழலைகளுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதில் கடைசியாக வரியாக… "நடு வீட்டில் வைக்க வா நல்ல துதி செய்ய வா…" என்று இருந்தது. தற்போது LKG ,UKG தமிழ்பாட புத்தகம் ராயபேட்டையில் உள்ள சம்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது அதில்… "ஈசன் முன்னால் வைக்கவா… இனிய துதி செய்ய வா… என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈசான் என்றால் சிவன் என்று பொருள்.எனது தொப்புள் கொடி உறவுகளான இந்து சமுதாய மக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்று சிவன்.நானும் அவர்களின் நம்பிக்கையை , வழிபாட்டை மதிக்கிறேன். ஆனால் , ஒரு பாடப்புத்தகத்தில் ஒரு பொதுப்பாடத்தில் சிவன் , அல்லாஹ் , ஏசு என்று எந்த கடவுள்களின் பெயரும் வேண்டாம். எனவே இதில் அரசு தலையிட்டு மீண்டும் பழையபடி அதை மாற்றி எழுதவும் , பள்ளிக்கூடங்களில் அதன்படி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கவும் ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை கெட்டுக்கொள்கிறேன். தகவல் தொகுப்பு: மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING 17.06.2017
சட்டசபையில் நேற்று கல்வி மானியக் கோரிக்கையில் M. தமிமுன் அன்சாரி MLA உரையின் பாகம்-1
காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்...! கவிக்கோ. அப்துல் ரஹ்மான் பெயரில் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்...!! சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ! (சட்டசபையில் 15.06.17 அன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய உரையின் பாகம் - 1) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே....! தமிழ் நாட்டின் ரவீந்திரநாத் தாகூராகவும் , கவி அல்லமா இக்பாலாகவும் , தமிழ் நாட்டின் வெல்வியாகவும் வாழ்ந்த கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த 02.06.17 அன்று மரணமடைந்தார். உலக கவிதைகளை தமிழுக்கு தந்தவர். தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். அவர்தான் ஹைகூ, சர்ரியலிச வடிவ கவிதைகளை தமிழுக்கு தந்தவர். அவரை சிறப்பிக்கும் பொருட்டாக, சென்னை பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் கவிதைகளுக்கான உயர் ஆய்வு இருக்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்கு 1 கோடி ரூபாய் செலவாகும். இது ஒரு பிரச்சனை எனில், தமிழக அரசு 50 லட்ச ரூபாயை ஒதுக்கினால், மீதி 50 லட்ச ரூபாயை கவிக்கோ ஆதரவாளர்கள், சமூக பிரமுகர்களிடம் பெற நான் முயற்சி செய்கிறேன். இதற்கு தமிழக அரசு ஏற்பாடு
மஜக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை ஆலோசனை கூட்டம்…
திருவாரூர்.ஜூன்.16., நேற்று 15/06/2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதக்குடி கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜமால் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் PMA. சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணை செயலாளர் அத்திக்கடை லியாகத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, குவைத் மண்டல கிளை செயலாளர் யூசுப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்வரும் 18/06/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மஜக பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை மற்றும் பொதக்குடி அமீரகம் ஜமாத் இணைந்து நடத்தும் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சியின் கலந்து கொள்ள இருக்கிறார். ஆகையால் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. அதில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு சில தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #ⓂJK_IT_WING திருவாரூர் மாவட்டம் 16.06.2017
கல்வி மானிய கோரிக்கையில் இதுவரை பேசப்படாத கருத்துக்களை முன் வைத்து சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் சிறப்புரை!
சென்னை.ஜூன்.15., நேற்று பள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை விவாதங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துகொண்டு பேசினார். வாழ்வில் அவதூறுகளும், துன்பங்களும், துயரங்களும் முற்றுகையிடும்போது நநம்பிக்கையும், தைரியமும் தேவை. இறைவனின் அருளும், நேர்மையான என்னங்களும், சிறந்த கல்வியும் இணையும்போது அவற்றை எல்லாம் முறியடிக்கும் வலிமையை பெறுகிறோம் என்றார். புனித ரமலான் நோன்பை கடைபிடித்த நிலையில் இந்த மாமன்றத்தில் பேசுகின்றேன் என்றவர், இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திப்பதாக கூறினார். பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செய்துவரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ப்ளஸ் டூவீல் ரேங் முறையை ஒழித்தது, இந்த ஆண்டில் பள்ளிக்கூடம் தொடங்கிய அன்றே பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு இறுதியாண்டு தேர்வு தேதிகளை அறிவித்தது ஆகியவற்றை பாராட்டினார். மேலும் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு தேர்வு அறிவித்திருப்பது குறித்து திமுக உறுப்பினர் பொன்முடி கூறிய விசயத்தை தனது பேச்சில் சுட்டிக்காட்டிவர், அதில் சாதகம் அதிகமிருந்தால் செயல் படுத்துங்கள் பாதகம் இருந்தால் விட்டுவிடுங்கள் என்றார். நிலா நிலா ஓடிவா, பாடலில் திரிபு செய்யப்பட்ட மத வார்த்தைகளை நீக்கவேண்டும், யோகாவை