கடந்த (08.11.16) அன்று நாகப்பட்டினத்தில் ஜமாத்துல் உலமா முன்முயற்ச்சியில் பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரனி MLA, முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மான் EX.MP, தேசிய லீக் சார்பில் நிஜாமுதின் EX.MLA, JAQH சார்பில் முஹைதின் பக்ரி, தேசிய லீக் கட்சி சார்பில் தடா ரஹீம், sdpi கட்சி சார்பில் நிஜாம் மைதீன், திராவிட கழகம் சார்பில் அன்பழகன், மமக சார்பில் ஜபருல்லா, ஜமாத்துல் உலமா சார்பில் முகமது ரிழா பாஜீல் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, நாகை தெற்கு.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
ஜனநாயக சக்திகளோடு இணைந்து போராடுவோம்! மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் சூளுரை!
நவ.07., இன்று 125 ஜமாத்துகள் மதுரையில் ஒன்றாக இணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும், அறிஞர்களும் உரையாற்றினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு... நேற்று கோவையில் ஐக்கிய ஜமாத்தும், திருச்சியில் TNTJ வும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டியுள்ளனர். இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மக்களை திரட்டியுள்ளது. கட்சி வேறுபாடுகளை, கருத்து வேறுபாடுகளை களைந்து கூடியிருக்கிறோம். நாம் கூடியிருப்பது யாருக்கும் எதிராக அல்ல. இந்தியாவின் ஜனநாயகத்தை; பன்முகத்தன்மையை; ஒற்றுமையை காக்க திரண்டிருக்கிறோம். முதலில் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள். பிறகு வன்கொடுமை சட்டத்தை நீக்குவார்கள். பிறகு இட ஒதுக்கீட்டை பறிப்பார்கள். பிறகு மொழியுரிமைகளை பறிப்பார்கள். எனவேதான் நாம் அனைத்து மக்களையும் அழைக்கிறோம். முஸ்லிம்கள் முதலில் களத்திற்க்கு வந்திருக்கிறார்கள். காரணம், அவர்கள் அநீதியை எதிர்ப்பதில் வரலாறு முழுவதும் அவர்கள்தான் முன்னிலையில் நிற்கிறார்கள். இந்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்ப்பட்டோர், இதர சிறுபான்மையினர் நம்மோடு இருக்கிறார்கள். மோடிக்கு 31% சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். 69% மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். உத்திரப்பிரதேச தேர்தலுக்காக மோடி நாடகம் ஆடுகிறார். அவர்களால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர
சென்னை மிரண்டது! மஜக பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி!
நவ.05., நேற்று (04/11/2016) சென்னை மண்ணடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து "சமூக நீதிக்கான பொதுக்கூட்டம்" மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி, தொல்.திருமாவளவன், S.S.ஹாரூண் ரஷீத், டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது, மெளலவி சம்சுதீன் நாசர் உமரி, தாவுத் மியாக் கான், அடையாறு இமாம் மெளலவி சதீதுத்தீன் பாகவி, N.A.தைமிய்யா உள்ளிட்டோர் உரையாற்றினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் திரண்டதால், 7 மணியளவில் பாரிமுனை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 மணியளவில் தம்புச்செட்டித் தெருவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். அம்பாள் பிரஸ் தொடங்கி மெட்ரோ பேலஸ் தாண்டியும் கூட்டம் நீண்டது. சாலையின் இருபுறங்களிலும் இடம் கிடைக்காமல் மக்கள் நின்றபடியே நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். ஜமாத்தார்கள், பெண்கள், இளைஞர்கள், பிற சமுதாய சகோதரர்கள் என கூட்டம் பன்முகத்தன்மையோடு இருந்தது. தலைவர்களின் ஆவேச, அர்த்தமுள்ள உரைகளை கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது! சென்னையில் மஜக மத்திய அரசை மிரட்டியிருக்கிறது. விரைவில் இது தமிழகம் முழுக்க பரவும்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! தகவல்; மஜக ஊடகப்பிரிவு(சென்னை)
சென்னை பல்கலைகழகத்தில் பொதுசிவில் சட்ட கலந்துரையாடல்!
இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய படிப்பக மையம் சார்பில் பொதுசிவில் சட்டம், மற்றும் தலாக் குறித்த கலந்துரையாடல் நடைப்பெற்றது. பல்வேறு மத நம்பிக்கையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், இடது சாரிகள், முற்போக்காளர்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள் என பல களங்களிலிருந்தும் அறிவுஜீவிகளும், செயல்பாட்டார்களும் வருகை தந்திருந்தனர். பேரா. வசந்தி தேவி, பாத்திமா முசப்பர், எழுத்தாளர் சல்மா, வழக்கறிஞர் கீதா, பர்வீன் பாப்பா, ஓவியா உள்ளிட்ட பெண் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, தாவுத் மியான்கான், T.S.S மணி, பத்திரிக்கையாளர் குமரேசன், ஆவணப்பட இயக்குனர் அன்வர், முஸ்லிம் லீக் சார்பில் நிஜாம், INTJ சார்பில் இக்பால், IFT சார்பில் சிக்கந்தர், தோழர் மணிவண்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மாறுபட்ட கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பரிமாறினர். ஜனநாயக களத்தில் அவரவர் பார்வையில், கோணத்தில் சிறப்பான முறையில் பேசிட சென்னை பல்கலைகழக இஸ்லாமியக் ஸ்டெடி சென்டர் சார்பில் பேரா. அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்ததை அனைவரும் பாரட்டினர்.
எங்கள் இதயங்களை உடைத்து_விடாதிர்கள்! நாமக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் உரை…
நாமக்கல்லில் ஷரியத் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பல்வேறு சமூகதலைவர்களுடன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் தலைவர் இஸ்மாயில், தமுமுக சார்பில் தர்மபுரி சாதிக் மற்றும் ஜமாத்துல் உலமா மாநில துணைத் தலைவர் அபுல் கலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.... நாம் யாருக்கும் எதிராகவும் கூடவில்லை, யாரையும் அச்சுறுத்துவதற்காக திரளவில்லை. இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்மை தன்மையையும் காப்பாற்ற கூடியுள்ளோம். ஒவ்வொறு சமூகத்திற்க்கும் மொத்தம் தனியே 300 சிவில் சட்டங்கள் உண்டு. அதில் முஸ்லிம்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வக்பு வாரியம் ஆகிய நான்கு விஷயங்களுக்கு மட்டுமே தனிச்சட்டம் உள்ளது. பிற விஷயங்களில் எல்லோருக்கும் உள்ள சட்டங்கள் முஸ்லிம்களையும் பின்பற்ற செய்கிறது. அம்பேத்கார் ஒரு பொதுவான அனைவரும் ஏற்ககூடிய சமூக அமைப்பு உருவான பிறகுதான் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுவது குறித்து பேசியிறுக்கிறார். அரசியல் சட்டத்தின் கொள்கை விளக்க தலைப்பில் 44 வது சட்டம் பற்றி பேசுவதாக கூறிகிறார்கள். ஆனால் 37 வது பிரிவு அதுபற்றி