புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவரை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் தோழர் அய்யாக்கண்ணு, தோழர் தினேஷ் ஆகியோர் வரவேற்று விவசாயிகளிடம் உற்சாகமாக அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு விவசாயிகளுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். விவசாயிகள் அவரது உரையை வரவேற்று கைத்தட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அதன் பிறகு பொதுச்செயலாளரிடம் விரிவாக பேசிய விவசாயிகள், இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், எங்களுடைய இந்த பிரச்சனைகளை, போராட்ட உணர்வுகளை முதல்வரின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் அவர்கள் உடனடியாக இன்று இரவே முதல்வருடைய தனி கவனத்திற்கு நேரடியாக எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். பொதுச் செயலாளருடைய இந்த முயற்ச்சிக்கு விவசாயிகள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மூன்று மணிநேரம் அவர்களோடு களத்தில் இருந்த பொதுச் செயலாளர் அவர்கள், அதன்பிறகு அவர்களுடைய
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை 01/04/2017 சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். காலை புறப்பட்டு செல்லும் அவர் நாளை மதியம் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்கிறார். தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தலைமையகம்.
சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம் #சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி #நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு ! தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அப்போது முதல்வர் ,நிதியமைச்சர் உள்ளிட்டோரும் அவையில் இருந்தனர் . (பகுதி – 12) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 2017 - 2018 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமூக மக்களுக்காக புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை . இதை நான் நிதியமைச்சரிடமே நேரில் சுட்டி காட்டினேன். அந்த குறையை போக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு . உ.பி. யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க , வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் இடத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் . அப்படி தந்தால் அந்த பல்கலைக்கழக கிளையை இங்கு தொடங்க முடியும் . இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் . மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சென்னையில் வெளியூர்களிலிருந்து வருகை தந்து வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களின் நலனை
நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…
கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு ஓடுகிறது . மழை காலங்களில் நதிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே உத்தமசோழபுரம் / நரிமணம் அருகே தடுப்பணை ஒன்றை கட்டினால் நதிநீர் சேமிக்கப்படும் . இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் . 45 வருவாய் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் . எனவே இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் . இவ்வாறு நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் . நாகை மக்களின் நீண்டகால கோரிக்கை இப்போது சட்டசபையில் எதிரொலித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் , இதில் மிஞ்சும் தண்ணீரை பனங்குடி ஏரியில் சேமித்து , அதிலிருந்து கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் . மேலும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் , காரிய அமிலம் பாதுகாக்கப்பட்டு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் . இப்பகுதியில் ONGC நிறுவனம் ஆழ்துளையிட்டு
மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தடைசெய்ய வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தலைநகர் டெல்லியில் தோழர். அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாட்டை கடந்தும், இந்தியாவெங்கும் கூர்ந்து கவனிக்ககூடிய போராட்டமாக இப்போராட்டம் மாறியிருக்கிறது. விவசாயிகளின் விசயத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகமெங்கும் விவசாயிகளிடம் கோப அலைகள் பறவி கொண்டிருக்கின்றன. இவர்களை அலட்சியம் செய்யாமல், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 29.03.17.