(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) நீண்ட காலமாக பொதுவாழ்வில் உற்சாகத்துடன் பயணித்த அண்ணன் செங்கம்.ஜப்பார் அவர்கள் நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது . காயிதே மில்லத் அவர்களின் கரம்பற்றி அரசியலை தொடங்கிய அவர் , 1958-ல் தன்னை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் இணைத்துக் கொண்டு பொதுவாழ்வில் பயணித்தார் . அக்காலத்தில் அவர் உருதுவிலும் , தமிழிலும் ஆற்றும் சொற்பொழிவுகள் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தின . அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞரணி தலைவராக இருந்தபோது , அவரது பேச்சாற்றலை கண்டு ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இணைந்தனர். பலர் அவரை வழிகாட்டியாக கருதினர் . ஒருகாலத்தில் ஜனாப் A.K.A.அப்துல் சமது சாஹிப் , ஜனாப் அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோரின் வரிசையில் அவர் இடம் பெற்றிருந்தார் . கவிதை, நகைச்சுவை, எளிமையான உதாரணங்கள் ஆகியவற்றால் மேடைகளை அலங்கரித்தார் . அவரது பேச்சாற்றல் இந்திரா காந்தி போன்ற தேசிய தலைவர்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது . அவரது எழுச்சி உரைகள் அவரை 'சிங்கம்' ஜப்பாராக அடையாளம் காட்டியது . உருது மொழி ஆற்றலால் அவர்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகையில் மெல்ல மெல்ல சீராகும் தண்ணீர் விநியோகம்…!
நாகை.மே.19., நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நாகை சடமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலெக்டர் மூலம் தொடர் முயற்சிகளை மேற்க்கொண்டார். TWAD மூலம் கொள்ளிடத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி பெற்றார். இதுபோக, அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தற்போது கீழ்வேளூரில் புதிய ஆழ்துளை கிணறு ரூபாய் 25 லட்சம் செலவில் போடப்பட்டு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகை நராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்ட கலெக்டர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் ஜான்சன் அவர்களுக்கும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மே, ஜூன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய நான்கு மாதங்களுக்கான நாகை நகராட்சியின் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 19.05.17
குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளுடன் நாகை MLA கலந்தாய்வு!
நாகை.மே.09., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் நாகை நகராட்சி ஆணையர், திருமருகல் மற்றும் நாகை ஒன்றிய BDOக்கள், பொறியாளர்கள் அடுத்தடுத்து கலந்துக் கொண்டனர். இதில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தக்கட்ட திட்டமிடல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தனது 2017-2018 ஆண்டுக்கான இரண்டு கோடி ரூபாய் நிதியிலிருந்து திருமருகல் ஒன்றியத்திற்கு 50 லட்சம், நாகை நகராட்சிக்கு 47 லட்சம், நாகை ஒன்றியத்திற்கு 25 லட்சம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு 15 லட்சம் என ஆகமொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார். பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். குடிநீருக்காக தனது நிதி ஒதுக்கீடு குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். நாகை, நாகூர் கடற்கரைகளின் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், திட்டச்சேரியில் புதிய ரேஷன் கடை ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09/05/2017
நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!
நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார். மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகப்பட்டினம் மாவட்டம் 07-05-2017
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? பட்டமளிப்பு விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA உரை !
விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? மாணவர்கள் சிந்திக்க வேண்டும் ! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை ! நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற EGS பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 அன்று 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டார் . தொடர்ந்து 2 மணி நேரம் நின்றுகொண்டே 598 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். மருத்துவ ஓய்வு காரணமாக ஒருமாதம் வரை நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவரது குரல் பலவீனமான இருந்தாலும், கருத்துகள் வீரியத்தோடு வெளிப்பட்டு, பலத்த கரகோஷங்களை பெற்ற வண்ணம் இருந்தது.அவரை பின்னணி இசையுடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று முன்னுரை கொடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தபோது மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர் . தனது உரையில் , கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று வர்ணித்தவர், கல்லூரி முடித்த பிறகு அந்த நாட்களை நினைத்தால் கண்ணீர் முட்டும் என்றார்.