நாகை. ஜுன்.05., நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுமாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரியிடம் தொகுதி மக்கள் கோரிக்கை அளித்தனர். பல பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமாரை தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சந்தித்து நாகை இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மதுபான கடையையும், நாகை திருமேனிசெட்டி தெருவில் உள்ள மதுபான கடையையும் உடனடியாக அகற்றிடுமாறு வலியுறுத்தினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் .நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
கண்ணிய தலைவர் அன்றோ…! நமது காயிதே மில்லத்!
இந்தியாவில் ஒரு தலைவருக்கு 'கண்ணியத்திற்குரிய' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது என்றால் அது காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு மட்டும் தான் என்பது நாடறிந்த உண்மை! கறைபடாத கரம், நேர்மையான சிந்தனைகள், கண்ணியமான அணுகுமுறைகள், எளிமையான பொதுவாழ்வு, தூய்மையான தனி வாழ்வு, சவாலான விவகாரங்களில் துணிச்சலான முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டின் மீது அவர் காட்டிய அக்கறை, தமிழ் மீதான தணியாத தாகம், சமூக நல்லிணக்கத்தில் அவர் காட்டிய உறுதி இவையாவும் அந்த பெருமகனை வரலாற்றின் வெளிச்சத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நேரு, பெரியார், அண்ணா, அபுல்கலாம் ஆசாத், அறிவாசான் அம்பேத்கார், நம்பூதிபாட், தோழர். ஜீவா, ஐயா முத்துராமலிங்கத் தேவர், கலைஞர், MGR, நாவலர் நெடுஞ்செழியன், பேரா.அன்பழகன் என நாடு தழுவிய அளவில் அவர் கொண்டிருந்த நட்புகள் அவரது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்திய - சீன யுத்தம் நடந்தபோது, எனது மகன் மியாகானை ராணுவத்துக்கு பணியாற்ற அனுப்புகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார். எது தேசிய மொழி என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, என் மொழி தமிழுக்குத்தான் அந்த தகுதி உண்டு என அடித்துப் பேசினார். நாடு பிளவுப்பட்ட நிலையில், ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களைப் பார்த்து
தஞ்சை இப்தாரில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூர் கீழவாசல் ஹனபியா பள்ளிவாசளில் ஹனபியா பள்ளி ஜமாத்தும், நகர மனிதநேய ஜனநாயக கட்சியும் இணைந்து இன்று நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை.முபாரக், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யூசுப் ராஜா, கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் ஜப்பார், மாவட்ட துணைச் செயலாளர் மெய்தீன், நகர நிர்வாகிகள் அப்துல்லாஹ், சாகுல் ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் அவர்கள் இந்த ரமலானை சமூக நல்லிணகத்திற்க்கு எப்படி பயன்படுத்து என்று சிறப்பாக பேசினார். அவர் பேசி முடித்ததும் மாற்று மத சகோதரர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை தெற்கு மாவட்டம். 04.06.17
தமிழக அரசுக்கு கண்டனம் .! தஞ்சை விவசாயிகள் பேராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!
தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R.பாண்டியன் தலைமையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது . நான்காம் நாளில் போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து பேசினார் . தமிழக அரசு மத்திய அரசின் இத்தகையப் போக்குக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவைப் போல சமரசமில்லாமல் செயல்படவேண்டும் என்றார். மே17 இயக்கத் தலைவர் திருமுருகன், மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரின் மீது தமிழக அரசு போட்டிருக்கும் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், மாட்டுக்கறி மற்றும் மாடு விற்பனை தொடர்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றும் சாடினார் . முன்னதாக பேசிய தோழர் P.R.பாண்டியன் அவர்கள், காவிரி போராட்டத்தில் தொடர்ந்து நம்மோடு இயங்கி வருபவர் தமிமுன் அன்சாரி என்றும், சட்டசபையில் காவிரிக்காக சமரசம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மஜக
கவிக்கோ இறுதி நிகழ்வில் மஜக தலைவர்கள் பங்கேற்பு…
சென்னை.ஜூன்.03., இன்று கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்களின் ஜனாசா இறுதி தொழுகை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் அல்நூர் பள்ளிவாசலில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். அவருடன் மாநில செயலாளர்கள் N.தைமிய்யா, A. சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர். இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கிம், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் (Ex .MP), செ.ஹைதர் அலி, கவிஞர் அறிவுமதி, சிலம்பொலி செல்லப்பனார், பத்திரிக்கையாளர் குலாம் முகம்மது, ஆளூர் ஷாநவாஸ், ஆவண பட இயக்குனர் பாரதி குமார், இயக்குனர் அமீர், M.G.K.நிஜாமுதீன், திருப்பூர் அல்தாப், தி.மு.அப்துல் காதர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மெளலவி.கான் பாகவி, மெளலவி. இல்யாஸ் ரியாஜி, யுனிவர்சல் ஷாஜகான், பேராசிரியர்.ஹாஜாகனி, ப.அப்துல் சமது, அப்பல்லோ.அனிபா, புரசைவாக்கம் சிக்கந்தர், அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது, சிங்கப்பூர் முஸ்தபா, வெல்பர் பார்டி சிக்கந்தர், இயக்குனர் அகத்தியன். கோனிகா.பஷிர் ஹாஜியார், காயல் இளவரசு, இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்ச்சியில்