நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வடகரையில் இன்று பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஜமாத்தார்களை சந்தித்துப் பேசினார். பிறகு கடைவீதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் விருப்பங்களை கேட்டறிந்தார். மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி பரிந்துரை கடிதங்கள், விதவை பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்க பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை வழங்கினார். பிறகு தனது நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பாக்கம் - கோட்டூருக்கு பார்வையிட சென்றார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09.06.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பு…
நாகை.ஜூன்.08., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. நாகை நகராட்சிக்கு உட்பட்ட EGS பிள்ளை கல்லூரி சாலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17, ரூபாய் 20 லட்சம் மதிப்பீடு கொண்ட சாலையின் நீளம் - O- 215 மீட்டர் - 215- 430 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 08/06/2017
M.C.ராஜ் மரணம்! தேர்தல் சீர்திருத்தத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) இந்தியாவில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற முழக்கத்தோடு ஒற்றை ஆளுமையாய் நாடு முழுக்க வலம் வந்தவர் தோழர் M.C.ராஜ் அவர்கள். இதற்காக 'CERI' என்ற அமைப்பை தோற்றுவித்து ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது போன்ற 'விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை' இந்தியாவுக்கு தேவை என்பதை பரப்புரையாக்கினார். இக்கோரிக்கையை கடந்த 25 ஆண்டுகளில் இவர் அளவுக்கு இதுவரை யாரும் முன்னெடுத்து செயல்படவில்லை. நாடு முழுக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் சேவை இயக்க களங்களின் இது குறித்து கருத்தரங்குகளை நடத்தி அறிவுஜீவிகளை அணி திரட்டினார். CERI அமைப்பில் தமிழகம் சார்பில் நானும், விசிக-வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.சிந்தனை செல்வனும் இடம் பெற்று நாடு முழுக்க பயணித்தோம். தலைநகர் டெல்லியில் பல கருத்தரங்களில் பேசிடும் வாய்ப்பை M.C.ராஜ் அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்களின் போது, கடும் குளிரில் நாங்கள் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சென்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்தோம். அந்த மாபெரும் சேவையில் M.C.ராஜ் அவர்கள் எங்களை வழி நடத்தினார். இதன் மூலம் நாடறிந்த தலைவர்களோடு உரையாடும் வாய்ப்பும் , அறிமுகமும்
நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகிப்போம்!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதல பதிவு) புனித ரமலான் மாதம் இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான மாதமாகும். திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளப்பட்ட மாதம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது. உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் இறையச்ச உணர்வோடு நோன்பிருந்து, நல்ல காரியங்களை நாள்தோறும் நிறைவேற்றி, பாவங்களிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நமது நாட்டில் ரமலான் மாதத்தையும், நோன்பையும் இந்து , கிறித்தவ சகோதரர்களும் மிகுந்த மரியாதையோடு உற்று நோக்குகிறார்கள். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களில் சிலர் ஒரு நாள் நோன்பிருந்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று மகிழ்கிறார்கள். முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாழும், முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் ரமலான் மாதத்தில் எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை. இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது பாரம்பரிய உறவுகளின் உச்சமாகும். இத்தகைய சூழலில், சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புனித ரமலானில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் . இந்நிலையில் அன்பையும் , உறவையும் வலுப்படுத்தும் வகையில் , நோன்பு
இரா. செழியன் மரணம் .! மஜக இரங்கல் .!
அறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவரும் , நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களின் தம்பியுமான இரா. செழியன் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது . மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என வட இந்திய தலைவர்களால் போற்றப்பட்டவர் . நாடாளுமன்ற சட்ட நுட்பங்களை பலரும் இவரிடம் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்வார்கள் . அவர் நாடாளுமன்றத்திலும் , சட்டமன்றத்திலும் எழுப்பிய விவாதங்களும் , கேள்விகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன . தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் , பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் அறிஞராகவும் திகழ்ந்தார் . அவரை இழந்துவாடும் ஆதரவாளர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.06.2017