மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவையின் துபை மண்டலத்தில் தேரா கிளை கூட்டம் 11-9-2016 வெள்ளி அன்று நடைபெற்றது. #மண்டல_செயலாளர்_யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஊடக செயலாளர் #ஜியாவூல்_ஹக், துபை மண்டல பொருளாளர் #பசூர்_இஸ்மாயில்_பாபு, மண்டல துணை செயலாளர் #கடலங்குடி_ஹர்பின், மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துபை மண்டலத்தின் #தேரா_கிளை #பகுதி_செயலாளராக_பரீத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேரா கிளையின் சார்பில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் சபீக் நன்றி கூற கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நிறைவு பெற்றது. ஏற்கனவே துபை மண்டலத்தில் ஹோரல் அன்ஸ், அல்-கூஸ், மற்றும் மம்ஜார் கிளை பகுதி செயலாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. -மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டல ஊடக பிரிவு.
Author: admin
பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய பஜக பாசிச அரசை கண்டித்து மஜக வேலூர் மாநகரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய பஜக பாசிச அரசை கண்டித்து. மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாநகரம் சார்பாக 11.11.2016 வெள்ளிகிழமை, மாலை 3மணியளவில் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது... தலைமை O.S.தாஜீத்தின் அஸ்கர்.DCE. மாநகர செயலாளர். முன்னிலை S.முஹம்மத் ஜாபர். மாவட்ட செயலாளர். வரவேற்புரை S.முஜீப் மாநகர துணை செயலாளர். கண்டன உரை மனிதநேய ஜனநாயக கட்சி யின் மாநில பொருளாளர் அண்ணன், எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.com, மொளலவி,S.S.நாசிர் உமரி சாஹெப். மாநில அவைதலைவர், அண்ணன்,N.A.தைமியா, மாநில செயலாளர். மாநில துனை செயலாளர் புதுமடம் அனிஸ் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் மாநில இளைஞர் அணி பொருளாளர் எ.மன்சூர் அஹ்மத் வேலூர் மே மாவட்ட பொருளாளர் எ.தாஜுதீன் மாவட்ட பொறுப்பாளர் நாவஸ் குடியாத்தம் நகர பொருளாளர் எஸ்.அனீஸ் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முபாரக் அஹமது நன்றியுரை M.A. ஹைதர் அலி மாநகர ஊடக பிரிவு செயலாளர்.
மீத்தேன் திட்டம் ரத்து! மக்கள் போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி!
(மஜ௧ பொதுச்செயலாளர் M. தமிமுன்அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை, திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய நாகையின் எல்லை பகுதிகளில் 1.75 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தது. இது விவசாய நிலங்களை பாழ்படுத்தி, விவசாய உற்பத்தியை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாங்களை ஒழித்து விடும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களில் நாங்களும் முழுமையாக பங்கெடுத்தோம். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. பிறகு, மத்திய அரசு மீத்தேன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனாலும், இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து விளக்கவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லியில் ஊடக துறையினர் நடத்தி மாநாட்டில் பங்கேற்ற பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த அறிவிப்பை வரவேற்பதுடன் அதில் மத்திய அரசு
JAQH சார்பில் கருத்தரங்கம் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
நவ.11., நாகூரில் நேற்று ( 10.11.16) JAQH அமைப்பு சார்பாக இஸ்லாமிய ஷரியத்தும் - பொதுசிவில் சட்டமும் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி, JAQH அமைப்பின் மாநில பொருளாலர் P. நூர் முஹம்மது, M.G.K நிஜாமுதின் EX.MLA ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடக பிரிவு, நாகை தெற்கு.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நாகை MLA ஆறுதல்…
நாகை தாமரைகுளம் மேல் கரையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. திருமணத்திர்காக வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தன. நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.