#தமிழகத்தில்_அலிகார்_பல்கலைக்கழகம் #சென்னையில்_வக்ஃபு_இடத்தில்_பெண்களுக்கு_விடுதி #நாகூரில்_வக்ஃபு_வாரிய_கல்லூரி சட்டசபையில் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி M_தமிமுன் அன்சாரி MLA பேச்சு ! தமிழக சட்டமன்றத்தில் 22.03.2017 அன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அப்போது முதல்வர் ,நிதியமைச்சர் உள்ளிட்டோரும் அவையில் இருந்தனர் . (பகுதி – 12) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 2017 - 2018 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமூக மக்களுக்காக புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை . இதை நான் நிதியமைச்சரிடமே நேரில் சுட்டி காட்டினேன். அந்த குறையை போக்குவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு . உ.பி. யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க , வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் இடத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் . அப்படி தந்தால் அந்த பல்கலைக்கழக கிளையை இங்கு தொடங்க முடியும் . இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் . மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சென்னையில் வெளியூர்களிலிருந்து வருகை தந்து வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களின் நலனை
Author: admin
புத்துணர்ச்சியோடு நடைபெற்ற கோவை கிணத்துக்கடவு பகுதி மஜக ஆலோசனை கூட்டம்…
img android-uri="content://media/external/images/media/12566" /> கோவை.மார்ச்.30., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துக்கடவு பகுதி அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜாபர்அலி தலைமை தாங்கினார், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அக்பர் அலி, அக்பர் கான், இளைஞரணி செயலாளர் இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எதிர் வரும் 02.04.17 ஞாயிறு அன்று பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும், நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவது என்றும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.03.17
நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…
கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு . (பகுதி -11) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு ஓடுகிறது . மழை காலங்களில் நதிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே உத்தமசோழபுரம் / நரிமணம் அருகே தடுப்பணை ஒன்றை கட்டினால் நதிநீர் சேமிக்கப்படும் . இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் . 45 வருவாய் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் . எனவே இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் . இவ்வாறு நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் . நாகை மக்களின் நீண்டகால கோரிக்கை இப்போது சட்டசபையில் எதிரொலித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் , இதில் மிஞ்சும் தண்ணீரை பனங்குடி ஏரியில் சேமித்து , அதிலிருந்து கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் . மேலும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் , காரிய அமிலம் பாதுகாக்கப்பட்டு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் . இப்பகுதியில் ONGC நிறுவனம் ஆழ்துளையிட்டு
ஆர்.கே. நகர் இடைதேர்தல் மஜக நிர்வாகிகள் ஆலோசனை
சென்னை.மார்ச்.29., ஆர்.கே. நகர் இடைதேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செய்ய வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது M.com அவர்கள் தலைமை தாங்கினார். வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளுர் கிழக்கு, திருவள்ளுர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்ட முடிவில் அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு TTV.தினகரன் அவர்களை வெற்றிபெற வைக்க மஜக தொண்டர்கள் திட்டமிட்டு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என முடிவெடுக்கபட்டது. தகவல் : தேர்தல் பணிக்குழு, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி. 29.03.2017
மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தடைசெய்ய வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தலைநகர் டெல்லியில் தோழர். அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாட்டை கடந்தும், இந்தியாவெங்கும் கூர்ந்து கவனிக்ககூடிய போராட்டமாக இப்போராட்டம் மாறியிருக்கிறது. விவசாயிகளின் விசயத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகமெங்கும் விவசாயிகளிடம் கோப அலைகள் பறவி கொண்டிருக்கின்றன. இவர்களை அலட்சியம் செய்யாமல், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 29.03.17.