நாகை தொகுதிக்குட்பட்ட புத்தூர் தாமரை குளம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. இதில் சர்ச்சைகள் இருந்ததை அறிந்த MLA அவர்கள் ஊர் மக்களை அழைத்து சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். தற்போது ஊர் மக்கள் ஒத்துழைப்போடு 2 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம் நுாற்றாண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவாதல், மக்கள் MLA வுக்கு நன்றி கூறினர். இக்குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பும்போது, 2 ஆயிரம் மக்கள் தினமும் பயனடைவார்கள். தினமும் 15 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். மேலும் மக்கள் குளிப்பதற்கு , வீட்டு தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு என இக்குளம் சேவையாற்றும் என்பது குறிப்பிடதக்கது. M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகளை நிறைவடைய செய்ய வேண்டும் என்றும், தனது முயற்சியால் படித்துறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். தகவல் நாகை சட்டமன்ற அலுவலகம் 05.07.2017
Author: admin
பிரமாண்ட இறகுபந்து நிலையம் திறப்பு! அன்புமணி ராமதாஸ், தமிமுன் அன்சாரி, ரமேஷ் அரவிந்தன் திறந்து வைத்தனர்.
காஞ்சி.ஜூலை.04., சென்னை அருகே சோழிங்கநல்லூரில் OMR பேட்மிண்டன் அகாடமி சார்பில் பிரமாண்ட இறகுப்பந்தாட்ட நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் ஆடுகளத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களும், இரண்டாவது ஆடுகளத்தை M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மூன்றாவது ஆடுகளத்தை சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் MLA அவர்களும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மஜக பொருளாலர் ஹாருன் ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா.நாசர், மாநில செயலாளர் தைமிய்யா, அதிமுக பிரமுகர் முஸ்தபா, இறகுபந்தாட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ECR மற்றும் OMR சாலையில் இருக்கும் புறநகர் மக்களுக்கு இந்த ஆடுகளம் பெரும் பொழுதுபோக்கு மையமாக திகழும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. அப்பாஸ், ரிபாயி, தஸ்லீம் ஆகியோர் இணைந்து இதை அமைத்துள்ளனர். அவர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. (#MJK_IT_WING) காஞ்சி மாவட்டம். 04.07.2017
நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத் தாருங்கள்! சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!
(04/06/2017 செவ்வாய் அன்று தமிழக சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் 'தகவல் கோரலின்' கீழ் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை) மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே.... நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த IND-TN-06-MM-523 எண் கொண்ட விசைப்படகில் 24-06-2017 அன்று 8 மீனவர்களும் புறப்பட்டனர். 24-06-2017 அன்று கோடியக்கரைக்கு நேர்கிழக்கே 33 நாட்டிகல் மைல் தொலைவில் நமது இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.முவிஷ் 2.செல்வம் 3.ராஜசேகர் 4.ரமேஷ் 5.சக்திவேல் 6.செந்தில் 7.வினோத் 8.சங்கர் ஆகிய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுவதால், அவர்களது குடும்பங்களும் கஷ்டத்தில் தவிக்கின்றன. அந்த மீன்பிடி படகின் விலை 66 லட்சமாகும். அதில் உள்ள பொருட்களின் மதிப்பு 12 லட்சமாகும். அதுபோல எனது நாகை தொகுதிக்கு உட்பட்ட நம்பியார் நகரை சேர்ந்த சத்யன், N.சங்கர், P.செல்லக்கண்ணு, விஜயவேல் ஆகியோருக்கு சொந்தமான நான்கு விசைப்படகுகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவருக்கும் படகுகளை மீட்டுத்தர வேண்டும். 100 சதவீத மானியத்தில் இவர்களுக்கு படகுகளை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் 135 படகுகள் இலங்கை
கதிராமங்கலம் பிரச்சனையை முன்னெடுப்போம்…! சட்டமன்ற வளாகத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், கவுதமன் பேட்டி!
சென்னை.ஜூலை.03., கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவைக்கு அப்போது வரவில்லை. இந்நிலையில் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் எழுந்து நின்று சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர் அனால் சபாநாயகர் நாளை பேசுங்கள் என்றார். இந்நிலையில் கதிராமங்கலத்தில் நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து முதல்வரின் பதில் திருப்திகரமாக இல்லாததால், இது குறித்து தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சட்டசபை வளாகத்தில் சந்தித்தனர். அப்போது போராட்டக்குழுவின் சார்பில் இயக்குனர் கெளதமன், தோழர் சரவணராஜன் ஆகியோரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். கதிராமங்கலத்தில் என்ன நடைபெற்றது என்று அரசு விளக்க வேண்டும் என்று கோரினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சட்டமன்ற வளாக செய்தி குழு, சென்னை. 03.07.2017
பழனியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் பாசிசத்திற்கு எதிரான கட்சிகளுடன் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மஜக பங்கேற்பு..!
திண்டுக்கல்.ஜூலை.02., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விவசாயத்திற்காக மாடுகளை வாங்கி சென்ற துரை மற்றும் செந்தில் இவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய மதவெறி பிடித்த VHP, RSS, இந்து முன்னணி, சிவசேனா, பா.ஜ.க, ஆகிய பாசிசவாதிகளை கண்டித்து பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலனச் சங்கம் தலைமையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் மற்றும் விடுதலை சிறுத்தைகள், DYFI, இந்திய குடியரசு கட்சி, தே.மு.தி.க, CPM, CPI, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தா.ம.க, ம.தி.மு.க, காங்கிரஸ், தி.மு.க, திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், தமிழ் புலிகள், நீலப்புலிகள், அனைத்து ஜமாத்தார்களும் மற்றும் அனைத்து விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும், பாசிச எதிர்ப்பாளர்களும், பொதுமக்களும், மாடு வியாபாரிகளும் இந்த பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபீபுல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர். ஹைதர்அலி கண்டன உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி. திண்டுக்கல் மாவட்டம். 2.7.2017