பிரமாண்ட இறகுபந்து நிலையம் திறப்பு! அன்புமணி ராமதாஸ், தமிமுன் அன்சாரி, ரமேஷ் அரவிந்தன் திறந்து வைத்தனர்.

image

image

image

image

காஞ்சி.ஜூலை.04., சென்னை அருகே சோழிங்கநல்லூரில் OMR பேட்மிண்டன் அகாடமி சார்பில் பிரமாண்ட இறகுப்பந்தாட்ட நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் முதல் ஆடுகளத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களும், இரண்டாவது ஆடுகளத்தை M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மூன்றாவது ஆடுகளத்தை சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் MLA அவர்களும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மஜக பொருளாலர் ஹாருன் ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா.நாசர், மாநில செயலாளர் தைமிய்யா, அதிமுக பிரமுகர் முஸ்தபா, இறகுபந்தாட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ECR மற்றும் OMR சாலையில் இருக்கும் புறநகர் மக்களுக்கு இந்த ஆடுகளம் பெரும் பொழுதுபோக்கு மையமாக திகழும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

அப்பாஸ், ரிபாயி, தஸ்லீம் ஆகியோர் இணைந்து இதை அமைத்துள்ளனர். அவர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
(#MJK_IT_WING)
காஞ்சி மாவட்டம்.
04.07.2017