மாநில நிர்வாகிகள் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் மொழிந்தனர்..!! கோவை. மார்ச்.01., #மனிதநேயஜனநாயககட்சி-யின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் காந்திஜி திடலில் பிப்ரவரி.29 அன்று தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிராக "வாழ்வுரிமை மாநாடு" நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது, அவைகள் பின்வருமாறு... தீர்மானம் - 01 குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது. அதுபோல் NRC, NPR போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எனவே CAA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் NPR, NRC சட்டங்களை நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் - 02 குடியுரிமை போராளிகளுக்கு இரங்கல்: குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்று வரும் அமைதி வழி ஜனநாயகப் போராட்டத்தில் தில்லி முதற்கொண்டு அரசபடைகளின்
Author: admin
குலுங்கியது கோவை மனித நேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்!
குடியுரிமைசட்டஎதிர்ப்புபோரில்ஒருவரலாற்றுதிருப்பம்! மார்ச் 01, கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. https://m.facebook.com/story.php?story_fbid=2305788299520932&id=700424783390633 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாமன்னர் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப், பாதிரியார் ஜெகத் கஸ்பர், மஜக அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை செயலாளர் ஹுசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை உறுப்பினர் கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாட்டு திடலுக்கு "காந்திஜி" அவர்களின் பெயரும், மாநாட்டு மேடைக்கு குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான டெல்லி ஷாஹின்
வாழ்வுரிமை மாநாட்டில் நீதியரசர் சச்சார், கௌரி லங்கேஷ், சிறுமி ஆசிபா, ரோஹித் வெமுலா போன்றோருக்கு மரியாதை….
இன்று பிப்.29, கோவையில் நடைபெறும் மஜகவின் வாழ்வுரிமை மாநாடு பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது. மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் கடும் குளிரில் உயிர் துறந்த குழந்தை ஜஹானாராவின் பெயர் மாநாட்டு மேடைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சச்சார் கமிட்டியின் தலைவராக இருந்து இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நீதியரசர் சச்சார் அவர்களின் பெயர் பிரதான நுழைவாயிலுக்கும், சங்பரிவார் ஆதரவு பயங்கரவாத சூழ்ச்சிக்கு பலியான மராட்டிய DGP மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் பெயர் மற்றொரு நுழைவாயிலுக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. பெண்கள் நுழைவாயிலுக்கு, ஃபாஸிஸ்ட்டுகளால் காஷ்மீரில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா வின் பெயரும், கண்காட்சி பகுதிக்கு ரோஹித் வெமுலாவின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அது போல் சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு பலியான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கெளரி லங்கேஷ் அவர்களின் பெயர் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. காலம் சென்ற கோவை மஜக வின் நிர்வாகி ஜெமிஷா அவர்களின் பெயரும் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. வாழ்வுரிமை மாநாட்டில் தலைவர்களையும், தியாகிகளையும் மஜக சிறப்பு செய்திருக்கிறது. இது மஜகவின் முற்போக்கு அணுகுமுறைகளையும், பன்முக அரசியல் பார்வைகளையும்
ஐந்தாம் ஆண்டில் மஜக, கோவையை நோக்கி புறப்பட்டு வாரீர்! முதமிமுன்அன்சாரி MLA அழைப்பு!
எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரும் மனிதநேய ஜனநாயக கட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அனைத்து மக்களையும் சமூக நீதி களத்தில் சகோதர - சகோதரிகளாக இணைக்கும் தங்க பாலத்தை கட்டியமைக்கும் மனிதநேய பணிகளை ; நுட்பமாக செய்து வெற்றி கண்டிருப்பதே இதன் நான்காண்டு சாதனைகளில் முதன்மையானதாகும். சந்தர்ப்பவாத பகட்டு அரசியலில் பொழுது போக்காமல், அனல் கக்கும் போராட்ட களங்களில் இதன் தொண்டர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். நமக்கேன் வம்பு? என்று பலரும் கண்டும் காணாமல் போகும் விவகாரங்களில்; துணிந்து களமாடி உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், எல்லோருக்கும் நல்லவர்களாக நடிப்பதை விட சத்தியத்தின் பக்கம் நிற்பதே அறமாகும் என்ற கோட்பாட்டோடு உழைத்தல், தவறுகள் தலைக்காட்டும் இடங்களில் மௌனங்களை பேணாமல் நிசப்தத்தை உடைத்து நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியலுக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அரசியல் சூறாவளிகளில் நிலைக்குலைந்து விடாமல், தவறான முடிவுகளெடுத்து தடுமாறி விடாமல் நேர் கோட்டில் பயணிக்கும் துணிச்சல் இறையருளால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்திருக்கிறது. இதோ.. விழிகளில் லட்சியங்களை சுமந்துக் கொண்டு இதயங்களில் நம்பிக்கைகளை விதைத்துக்
நீதிபதி நீதி பேசக் கூடாதா? திருப்பூர் கூட்டத்தில் மத்தியஅரசுக்கு தமிமுன்அன்சாரி MLA கண்டனம்!
பிப்.28, திருப்பூரில் மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கெதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது: அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை காப்பாற்றுவதற்காக நீண்ட நெடிய போராட்ட களத்தில் நிற்கிறோம். உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதைப் போல் இனி போராடுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். மாதத்தில் சமையலுக்கும், கேஸ், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றிற்கு ஒரு தொகையை ஒதுக்குவது போல் இனி போராட்டத்திற்கும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். ஏனெனில் இப்போராட்டம் இப்பொழுது நிறைவு பெறுவதாக தெரியவில்லை. மத்திய அரசின் பிடிவாதமும், பிரதமரின் ஆணவமும் மாறுவதாக தெரியவில்லை. அகன்ற மார்பு கொண்ட பிரதமரிடம் சின்ன சிறிய இதயமில்லாமல் போய்விட்டது. அவர்கள் போராட்டங்களை புரிந்து கொள்ளவில்லை. பிடிவாதம் பிடிக்கிறார்கள். https://m.facebook.com/story.php?story_fbid=2300894996676929&id=700424783390633 மக்களின் உரிமைப் போராட்டங்களை சிதைக்க துடிக்கிறார்கள். டெல்லியில் வன்முறைகளை சங்பரிவார் ஆதரவு கூலிப் படையினர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள். கபில் மிஸ்ராவின் டிவிட்டர் பதிவுகளை பார்த்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இந்த கலவரங்களை கண்டித்து அவர்கள் மீது FIR பதிவு செய்ய சொல்லி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்து