திருவாரூர்.மார்ச்.5, முத்துப்பேட்டையில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அனுமதி இன்றி போராடுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியிறுக்கிறது. காவல் துறை இடம் ஒதுக்காததால் தான், தாங்கள் விரும்பும் இடத்தில் மக்கள் அமர்ந்து போராடுகிறார்கள். இங்கு பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? மக்கள் ஓரமாக அமர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை இடம் தந்தால் அதில் அமர்ந்து போராடுவார்கள். அரசுக்கு எதிராக அமைதியாக போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி உள்ளது. கள நிலவரத்தை நீதிபதிகள் யோசிக்க வேண்டாமா? சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன பிறகும், உங்களால் யாரையாவது கைது செய்ய முடிந்ததா? முடியுமா? ஏனெனில் கள நிலவரம் அப்படி உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை, எல்லா மக்களையும் அரவணைத்து அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது வாழ்வுரிமைக்கான போராட்டம். சமரசம் செய்ய மாட்டோம். போராட்டக் குழுவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பேச்சாளர்களை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்துங்கள். முழக்கங்களை சரி பார்த்த பிறகு
Author: admin
வாழ்வுரிமை மாநாடு ஏற்படுத்திய எழுச்சி.. மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA நன்றி கடிதம்..!
ஆருயிர் மனிதநேய சொந்தங்களே.... இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான பணி சுமைகளும் அதை நிறைவேறாமலேயே தடுத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை. சொந்தங்களே.. நமது கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாம் அனைவருமே ஓடியாடி உழைத்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், ஐந்தாம் ஆண்டில் வலிமை மிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறோம். சற்றே திரும்பிபார்க்கின்ற போது, இவற்றையெல்லாம் நாம் எப்படி சமாளித்து கடந்து வந்தோம் என்ற ஆச்சரியங்கள் புருவங்களை உயர்த்த செய்கின்றன. அலைகடலில் போராடி, புயல் வீச்சில் புரண்டு, எதிர் நீச்சல் அடித்து, நெருப்பு வளையங்களை கடந்து நமது பயணம் சாகசங்களாக அமைந்திருக்கிறது. அரசியலின் ஆபத்தான வளைவுகளில் விழுந்து விடாமல், நமக்கான பாதைகளில் பயணித்தவாரே வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் விளைவாக, நமது சட்டமன்ற பணிகளை பாராட்டி மஹாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக குழுமமான புனே அமைதி பல்கலைக்கழகம் "இந்தியாவின் முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்" என்ற விருதை வழங்கிய போது, அது மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த மாணிக்கம்
இந்துக்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பேச்சு…!!
செங்கல்பட்டு., மார்ச்.03, திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்.. கடந்த வாரம் அஸ்ஸாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் குடியுரிமை அதிகரிகளிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம், எங்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய ஆவணங்கள் செல்லாது, என்றும் குடியுரிமை சான்றிதல் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றும் தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் ஜாபிதா பேகம் மற்றொருவரின் பெயர் முனீந்தர
மஜகவின் வாழ்வுரிமை மாநாடு..! மேதாபட்கர் அவர்கள் வாழ்த்துச் செய்தி..!
#மனிதநேயஜனநாயககட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் , #மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் சார்பில் மஜக பொதுச் செயலாளர் #முதமிமுன்அன்சாரி_MLA அவர்களுக்கு, அவர் அனுப்பிய மாநாட்டு ஆதரவு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது... (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது...) சீக்கியர்கள் மீதும், தலித்துகள் மீதும், ஆதிவாசிகள் மீதும், அவர்களின் அதிகாரத்தின் மீதும் நின்று கலவரங்கள் வழியாக உயிர் காவு வாங்கிய அந்த #தீய_சக்திகள் தற்போது முஸ்லிம்கள் மீது பாய தொடங்கி இருக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் களமாடி வருகின்றோம், தமிழகத்தில் அதனை எதிர்த்து கோயம்புத்தூரில் வாழ்வுரிமை மாநாடு நடத்துகின்ற மனிதநேய ஜனநாயக கட்சிக்கு #எனது_வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். குடியுரிமை உரிமை திருத்த சட்டம் என்பது அசாமில் தோல்வியை சந்தித்த ஒன்று, அதை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கின்ற பாரதிய ஜனதா அரசு நிச்சயமாக தோல்வியை சந்திக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைப்பது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதனை வலிமையாக எதிர்ப்போம். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு