மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் அவைத் தலைவர் S.S நாசர் உமரி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பால்கார மைதீன், முத்துப்பேட்டை நிர்வாகிகள் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட திரளான மஜகவினரும் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
Author: admin
நாகையில் தொடர் தர்ணா போராட்டத்தில் மஜக இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி கண்டன உரை!
மார்ச்.12, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. நான்காம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி அவர்கள் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார். டெல்லி ஷாகின்பாக் போராட்டக்களத்தின் ஒழுங்கமைப்பையும், அதன் இன்று நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை குறிப்பிட்டு போராட்டக்களத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், மு.MJVS செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் ஷாகுல் மற்றும் அடியற்கை, புலிவலம், கூத்தாநல்லூர் பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 11/03/2020
மஜக வில் இணைந்த இளைஞர்கள்..!
சென்னை.மார்ச்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜக-வில் இணைத்துக் கொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த H.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், G.புரோஸ்கான், GK. சமி, I.முஹம்மத் முஸ்தபா, S பிரோஸ் கான், A. செய்யது அலீம் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகி அப்துல் கலாம், புதுப்பேட்டை பஷீர் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 11-03-2020
மேலப் பாளையத்தில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணை பொதுச் செயலாளர் JS ரிபாய் ரஷாதி பங்கேற்பு..!
திருநெல்வேலி.மார்ச்.12., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஜார் திடலில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (11-03-2020) இரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி.J.S.ரியாப் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார், மேலப்பாளையம் போராட்டத்தில் 3-வது முறையாக உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.. உடன் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருநெல்வேலி_மாவட்டம் 11-03-2020