அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.12,
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் ஷாகுல் மற்றும் அடியற்கை, புலிவலம், கூத்தாநல்லூர் பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
11/03/2020