மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவைகள் போற்றுதலுக்குரியது. அது போல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப் படுத்தப்படாத காரணத்தால் அந்த சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கொண்ட ஒரு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும். இந்த பேரிடர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளை செய்ய முடியும். இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு
Tag: கொரோனா வைரஸ்
மஜக அச்சன் புதூர் பேரூர் கிளையின் சார்பாக இரண்டாவது கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
தென்காசி.ஏப்ரல்.21., இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளையின் சார்பாக கிளைச்செயலாளர் S.முகமது நாசர் தலைமையில் இரண்டாவது கட்டமாக 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் P.கமால் தீன், M.சேக் முகமது உசேன், A.அப்துல்லாஹ், S.ரியாஸ் கான், S.முஹம்மது ஷபிக், A.முஹம்மது செய்யது உள்ளிட்ட மஜக-வினர் நிவாரண பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம். 21-04-2020
தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்ப நலஉதவிகள்
ஏப்.21, நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளைகளின் சார்பாக ஊரங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கிருமிநாசி தெளிப்பு மற்றும் சுகாதாரப்பணிகளில் சிறப்புர ஈடுப்பட்டு வரும் ஏனங்குடி ஆதலையூர் புத்தகரம் ஊராட்சியை சார்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது. இதில் மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றிய துணை நிர்வாகிகளும், ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் விநியோகம்
சென்னை.ஏப்ரல்.21., நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி புரசைவாக்கம் 104வது வட்டம் சார்பாக புரசைவாக்கத்தில் பொன்னப்பா தெரு, தானா தெரு, சுந்தரம் தெரு, ஆகிய இடங்களில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் T. ரவூப் ரஹீம், துறைமுகம் காஜா, பகுதி துணைச் செயலாளர் அப்துல் கலாம், புரசைவாக்கம் 104 வது வட்டச் செயலாளர் முஹம்மது ஷரிப், துணை செயலாளர் சஃபீ, 77 வது வட்டச் செயலாளர் ஆதம் இம்தியாஸ், மற்றும் பிரோஸ், இஸ்மாயில், சையது அமீன், பாரூக், முஸ்தபா, சாஹீன்ஷ சாதிக் உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_கிழக்கு 21-04-2020
கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய மஜகவினர் : மருத்துவமனை முதல்வர் நன்றி!!
கோவை:ஏப்.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு தேவையான சாணிடைசர்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி பவடர்கள், உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனை முதல்வர் திருமதி, நிர்மலா, அவர்களிடம் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். அதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அவர்கள் இங்கு வருபவர்கள் எல்லாம் நோயாளிக்கு தேவையான பொருட்களை மட்டுமே வழங்குகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும்தான் எங்களை போன்ற மருத்துவர்களுக்கு அவசியமான பொருட்களை வழங்கியிருக்கிறீர்கள் இது எங்களுக்கு மிகவும் அவசியமானது என கூறி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் சுவனம் அபு, பைசல், பரக்கத்அலி, மற்றும் சிங்கை கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 21.04.2020