மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் விநியோகம்

சென்னை.ஏப்ரல்.21.,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி புரசைவாக்கம் 104வது வட்டம் சார்பாக புரசைவாக்கத்தில் பொன்னப்பா தெரு, தானா தெரு, சுந்தரம் தெரு, ஆகிய இடங்களில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் T. ரவூப் ரஹீம், துறைமுகம் காஜா, பகுதி துணைச் செயலாளர் அப்துல் கலாம், புரசைவாக்கம் 104 வது வட்டச் செயலாளர் முஹம்மது ஷரிப், துணை செயலாளர் சஃபீ, 77 வது வட்டச் செயலாளர் ஆதம் இம்தியாஸ், மற்றும் பிரோஸ், இஸ்மாயில், சையது அமீன், பாரூக், முஸ்தபா, சாஹீன்ஷ சாதிக் உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னை_கிழக்கு
21-04-2020