கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய மஜகவினர் : மருத்துவமனை முதல்வர் நன்றி!!

கோவை:ஏப்.21.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு தேவையான சாணிடைசர்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி பவடர்கள், உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனை முதல்வர் திருமதி, நிர்மலா, அவர்களிடம் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர்.

அதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அவர்கள் இங்கு வருபவர்கள் எல்லாம் நோயாளிக்கு தேவையான பொருட்களை மட்டுமே வழங்குகிறார்கள்.

ஆனால் நீங்கள் மட்டும்தான் எங்களை போன்ற மருத்துவர்களுக்கு அவசியமான பொருட்களை வழங்கியிருக்கிறீர்கள் இது எங்களுக்கு மிகவும் அவசியமானது என கூறி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் சுவனம் அபு, பைசல், பரக்கத்அலி, மற்றும் சிங்கை கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
21.04.2020