தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்ப நலஉதவிகள்

ஏப்.21,

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளைகளின் சார்பாக ஊரங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக கிருமிநாசி தெளிப்பு மற்றும் சுகாதாரப்பணிகளில் சிறப்புர ஈடுப்பட்டு வரும் ஏனங்குடி ஆதலையூர் புத்தகரம் ஊராட்சியை சார்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது.

இதில் மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றிய துணை நிர்வாகிகளும், ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.