மஜக அச்சன் புதூர் பேரூர் கிளையின் சார்பாக இரண்டாவது கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்


தென்காசி.ஏப்ரல்.21.,

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மஜக தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளையின் சார்பாக கிளைச்செயலாளர் S.முகமது நாசர் தலைமையில் இரண்டாவது கட்டமாக 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் P.கமால் தீன், M.சேக் முகமது உசேன், A.அப்துல்லாஹ், S.ரியாஸ் கான், S.முஹம்மது ஷபிக், A.முஹம்மது செய்யது உள்ளிட்ட மஜக-வினர் நிவாரண பொருட்களை விநியோகித்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்.
21-04-2020