காயல்பட்டினத்தில் மஜக சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு…

image

டிச.28., காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயககட்சியின் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை சந்தித்து காயல்பட்டினத்தில்  அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது

இந்நிகழ்வில் நகரசெயலாளர் ஜிப்ரி தலைமையில், நகர பொருளாளர் மீரான், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப்,நகர து.செயலாளர் ஜியாவுதீன்,நகர இளைஞரணி துணை செயளாலர் ஜரித் நகர மாணவர் இந்தியா து.செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்

இச்சந்திப்பில் நகராட்சி ஆணையர் அவர்களிடம்
ஏற்கனவே சட்ட சபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையில் நமது பொதுசெயலாளர் M.தமிமுல்அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக பேசியதையும் மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவின்படி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி நீதிமன்றம் தீர்ப்பு வந்திருப்பதை பற்றியும் விரிவாக  எடுத்து கூறப்பட்டது

நகராட்சி ஆணையர் அவர்களும் இது கூறித்து விரைந்து உறிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

எல்லா புகழும் இறைவனுக்கே
இறுதி வெற்றி நமது அணிக்கே

தகவல்: மகக ஊடகபிரிவு,
காயல் நகரம்