ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! தென்காசியில் மஜக பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சி

image

image

image

image

நெல்லை.அக்.22., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (22_10_17) பெரும் எழுச்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கட்சி தொடங்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் புளியங்குடிக்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாவதாக தென்காசியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதன் மூலம் மஜகவின் மக்கள் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஊரெங்கும் மஜக கொடிகள், வரவேற்பு பதாகைகள், போஸ்டர்கள், பேனர்கள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், தமுமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் புளியங்குடி.செய்யது அலி தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநில செயலாளர் தைமிய்யா உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளை திரளான மக்கள் கூட்டத்தை தாண்டியும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்கள் பேரார்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான், மாநிலத் துணைச் செயலாளர்கள் கோவை.பஷீர், தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் வானவில் காதர், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், மாவட்ட பொருளாளர் செய்யது அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
22_10_17