கரம்பக்குடியில் எழுச்சியாக நடந்த மஜகவின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்…

image

image

image

புதுகை. மார்ச்.20., நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்” வெகு சிறப்பாக நடைபெற்றது.

மஜக புதுக்கோட்டை  மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில், நகர செயலாளர் S. அமீர் அம்ஷா வரவேற்புரை நிகழ்த்த பொதுக்கூட்டம் துவங்கியது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமுமுக, மமக போன்ற பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் இருந்து பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

மஜக மாநில பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில செயலாளர் N.A. தைம்மியா, மாநில துணை  பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னிலை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம். ஹாரிஸ், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர்  துரை முகம்மது, பொருளாளர் ரஹீம் தாலிப்,மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் V. சீனிவாசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஷேக் இஸ்மாயில், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது கபீர், பொருளாளர் அப்துல் ஜப்பார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் பேசும் போது பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சிறப்பான சட்டமன்ற உரைகளை எடுத்துக்கூறி பாராட்டினார்.

இறுதியாக கரம்பக்குடி நகர மஜக தொண்டரணி செயலாளர் சகாப் தீன்  நன்றியுரை நிகழ்த்த பொதுக்கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

கரம்பக்குடி ஒன்றிய, நகர நிர்வாகிகள் இப் பொதுக்கூட்டதிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்,
#MJK_IT_WING
19.03.2017