காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மஜக MLA விடம் கோரிக்கை மனு…

image

image

தூத்துக்குடி, மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA  MLA அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அவருடன் மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரஷிது மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா  ஆகியோர் உடன் இருந்தனர்.

இம்மனுவை காயல்பட்டணத்தை சார்ந்த தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில்  ஆகியோர் காயல்பட்டிணம் நகரத்தின் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினார்கள்

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்
20.03.2017