காயல்பட்டினத்தில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து மஜக மனு…

image

image

தூத்துக்குடி,மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு KC.கருப்பணன் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக்கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்.
20.03.2017