MKP கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்தத்தான முகாம்.!

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்த தான முகாம் ஆசியன் டவுன் (சனயா பகுதி) மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் (18-12-2021) அன்று மாலை நடைபெற்றது.

கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICC நிர்வாகி திரு அனிஷ் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார்.

நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ICC தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்,
QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா, ஐக்கிய தமிழ் மன்ற ( UTF ) ஒருங்கிணைப்பாளர் நாசர், கத்தார் சஹாபாக்கள் நூலக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் MKP கத்தார் மண்டல நிர்வாகம் சார்பாக 2022 ஆண்டிற்கான காலண்டரை வெளியீடு செய்தார்.

இம்முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ்,
மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிப்பேட்டை பாருக், திருச்சி நஜீர் பாட்ஷா, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கருப்பூர் உபைஸ் திருப்பத்தூர் தாஹா, அபுதாஹிர், திருச்சி ஹுசைன், மஸ்கர் மற்றும் YAFA_ CARGO நிர்வாகி அப்துல்லாஹ் ஆகியோருடன் கத்தார் வாழ் தமிழ் சொந்தங்கள் மற்றும் திரளான மஜக சகோதரர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#கத்தார்_மண்டலம்
18-12-2021