அழைப்பிதழ் பணிகள் தொடக்கம்… மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பொதக்குடியில் தொடங்கி வைத்தார்…

ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டத்தை அறிவித்தது முதல் மஜக வை சுற்றி மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல தரப்பட்ட மக்களும் தன்னெழுச்சியாக கோவையை நோக்கி புறப்பட தயாராகி வரும் செய்திகள் போராட்டக் குழுவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

பல்வேறு சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக சேவர்கள், அறிஞர்கள், ஜமாத் தலைவர்கள், இமாம்கள் ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இன்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியை திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.

ஜனவரி 8, கோவை சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை திருவாரூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் ஜனாப். ரபியுதீன் அவர்களிடமும், பொதக்குடி அனைத்து ஐமாத் தலைவர் ஜனாப் A.S. மகம்மூது மெய்தீன் அவர்களிடமும் பொதுச் செயலாளர் நேரில் வழங்கினார்.

பெருமளவில் ஜமாத்தார்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனவும், ஜனவரி 7 வெள்ளி அன்று ஜும்மா விலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக்,, மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
19.12.2021