நீலகிரி கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கமாலுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் ஆக மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித் ஜாபர், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் மஜிது , ஹமீத் , அதிப் , மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரவிவர்மா,விவசாய அணி மாவட்ட செயலாளர் பாருக் ஆகியோர் பங்கேற்றனர்

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
19.12.2021