குடியாத்தம் நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் நகரத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் முபாரக் அஹ்மத் நகர து.செயலாளர் கவுஸ் பாஷா,நகர,மருத்துவ சேவை அணி செயலாளர்கள் சாதிக்.முஹம்மத் உசேன், மாணவர் இந்தியா நகர செயலாளர் ஜிஷான் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
19.12.2021