வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..

வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் இன்று DGP அலுவலகம் சென்றனர்.

காவல் துறை இயக்குனர் திரு.சைலந்திர பாபு அவர்களிடம் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்தும், வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்தும் மனு ஒன்றை பொதுச் செயலாளர் அவர்கள் கையளித்தார்.

பிறகு உளவுத் துறை ADGP திரு.டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத் துறை IG திரு.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
13.09.2021