வேல்முருகன் கைதை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!

கடலூர்.ஜூன்.08., தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் #வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருப்பதை கண்டித்து.

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு தோழர்.வேல்முருகன் கைதுக்கு காரணமான மத்திய பாசிச அரசுக்கெதிராகவும், தமிழக அரசுக்கெதிராகவும் தனது கண்டனத்தை வெளிபடுத்தினார்.

இந்த ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அஜ்மிர்கன், மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட மீனவர்அணி செயலாளர் சேட், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் மன்சூர், பண்ருட்டி நகர செயலாளர் யாசின், கடலூர் நகர செயலாளர் ரியாஸ், நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஆதம் சேட், நெய்வேலி டவுன்ஷிப் நகர நிர்வாகி ரியாஸ், நெல்லிகுப்பம் நகர செயலாளர் பாசித், Ot கிளை செயலாளர் அப்துல்ரஹிம், அண்ணா நகர் ஒன்றிய செயலாளர் ரஹிம், மற்றும் பல்வேறு நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
08.06.18