தென்காசி.மார்ச்.6, புளியங்குடியில் அத்தக்வா பயிலகம் சார்பில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநாடு நடைப்பெற்றது, இதில் செ.ஹைதர் அலி, தி.வேல்முருகன், அய்யாவழி பாலமுருகன், காயல் மஹ்பூப், புளியங்குடி செய்யதலி, தென்காசி நெய்னா உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றியதாவது... நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில், நாம் சாதி, மதங்களை கடந்து போராடுகிறோம் என்பதே ஒரு சிறப்புத்தான். அதற்கு இந்த மேடையும் ஒரு உதாரணமாகும். அவர்கள் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தார்கள். ஆனால், நாம் நாட்டைக் காக்க ஒன்றாக போராடுகிறோம். நாட்டிலேயே முதன் முதலாக அஸ்ஸாமில் இந்த போராட்டங்களை தொடங்கி வைத்ததே இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் தான் பாதிப்பை முதலில் உணர்ந்தவர்கள். இன்று அஸ்ஸாமின் தடுப்பு முகாம்களில் நிலவும் அவலங்கள் கொடுமையானது. அங்கு பாலுக்கு அழும் குழந்தைகளின் பசி தீர்க்க. நீண்ட வரிசையில் தாய்மார்கள் காத்துக் கிடக்கிறார்கள். முகாமில் உள்ள மருத்துவரை பார்க்க பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். ஒரே கூடாரத்தில் பலர் அடைக்கப்பட்டு நெரிசலில் தினமும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. "கழிவறை" பயன்படுத்த மக்கள் 'வரிசையில்' நிற்கும் கொடுமை நிலவுகிறது. அங்கு NRC அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சீரழிவுகள்
Month:
சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள கருத்துபிழையை நீக்குக..! தமிழகமுதல்வருக்கு மு தமிமுன்அன்சாரி MLA கடிதம்..!
சென்னை.மார்ச்.6, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.., தமிழக அரசின் எட்டாம் வகுப்பு பாடத் திட்டத்தின் மூன்றாம் பருவ சமூக அறிவியல் புத்தகத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக கருத்து பிழை உள்ளது. மூன்றாம் பருவ சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 157-ல் பெண்களின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பல சங்கங்கள், சமய அமைப்புகள் பெண்களின் சீர்திருத்தத்திற்கு முயற்சித்ததாகவும் அதனைத் தொடர்ந்து 158-ஆவது பக்கத்தின் முதல் பத்தியில் பர்தா அணியும் முறையிலிருந்து வெளியேறுதல் ஆங்கிலேயர் காலத்தில் சமூக சீர்திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் அவர்களது மார்க்கம் வழங்கும் சுய அங்கீகாரமாகவும், பாதுகாப்பிற்காகவும் விரும்பி அணியும் பர்தாவை பாடநூலில் தவறாக சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கருத்துப் பிழையை பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஓரு வருடங்களாக பல்வேறு தவறான கருத்துகளை பாடத்திட்டத்தில் இடம்பெறுவது வருத்ததிற்குரியதாக உள்ளது. தற்போது உள்ள பாடநூல் அமைப்பு குழுவை கலைத்து தகுதியான குழுவை வரும் காலங்களில் அமைத்திட வேண்டுகிறோம் என்று அக்கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 06-03-2020
எத்தனை லட்சம்பேரை கைது செய்வீர்கள்? முதமிமுன்அன்சாரி MLA கேள்வி..!
இராமநாதபுரம்.மார்ச்.6., தொண்டியில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... நாட்டில் நடைபெறும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களை திணித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. சாமனிய மக்களுக்கு இலவச மருத்துவம் எட்டாக்கனியாகி வருகிறது. மக்கள் தொழிற்சாலைகளை கேட்கிறார்கள். பல்கலைக்கழகங்களை கேட்கிறார்கள். ஆனால் யாரும் கேட்காத குடியுரிமை கறுப்பு சட்டங்கள் திணிக்கிறார்கள். தாத்தா, பாட்டியின் ஆவணங்களை கேட்டால் எங்கு போவது? பிரதமரால் கூட காட்ட முடியுமா? 1971-க்கு பிறகு தான் அவையெல்லாம் ஒழுங்குப் படுத்தப்பட்டன. அதற்கு முன்னால் பிறந்தவர்களின் விபரங்களை கேட்டால் யாராலும் காண்பிக்க முடியாது. மலைவாழ் மக்கள், பழங்குடிகள், நரிக்குறவர் போன்ற நாடோடி மக்களிடம் ஆவணங்களை கேட்டால் என்ன செய்வார்கள்? அவர்களது குடியுரிமை பறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் எந்த ஆவணத்தை காட்டுவார்கள்? எனவேதான் இதை வேண்டாத வேலை என்கிறோம். அஸ்ஸாமில் இதை அமல்படுத்தியதால் பெரும் சமூக
மாணவர்கள் வீட்டுப்பாடங்களை போராட்டகளத்தில் எழுதுகிறார்கள், இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவே முடியாது.!! முதமிமுன்அன்சாரி MLA
புதுக்கோட்டை.மார்ச்.06, புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோபாலப்பட்டினத்தில் 5-வது நாளாக குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதி வழி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று (05.03.2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஊக்க உரை நிகழ்த்தினார். அதில் பேசியதாவது... இதுவரை வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்திவருக்கிறார்கள், ஏன் என்று சொன்னால் அதற்கு காரணம் இந்நாட்டின் ஜனநாயகத்தை நாசப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒரு தாய் மக்களாய் எல்லோரும் ஓர் அணியில் இணையவேண்டும் என்பதற்காக தான். அதனால் தான் இந்த கருப்பு சட்டங்களை அனுமதிக்க கூடாது, ஏன் என்று சொன்னால் காலம், காலமாக உறவு பாராட்டி வரும் இந்த மக்களுக்கு மத்தியிலே பிரிவினை ஏற்படுத்த கூடிய, பாகுபாடுகளை உருவாக்க கூடிய, இந்த CAA, NRC, NPR,.. போன்ற சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி போராடி வருகின்றோம். துரதிஷ்டவசமாக என்ன நடக்கிறது என்று சொன்னால், இந்த போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். உண்மையிலேயே அஸ்ஸாமில் இந்த NRC சட்டம் அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் 19-இலட்சம்
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும்.! முதமிமுன்அன்சாரிMLA
புதுக்கோட்டை.மார்ச்.6, அம்மாபட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசியதாவது... இரவும், பகலுமாக மக்கள் அமைதி வழியில் கூடி போராடுகிறார்கள். போக்குவரத்துக்கு சிறிதும் பாதிப்பில்லை. யாருக்கும் தொந்தரவு இல்லை. இப்படி ஜனநாயக வழியில் போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும். வேலைகளை விட்டு விட்டு, வருமானத்தை இழந்து விட்டு, குடும்பம், குடும்பமாக குடியுரிமைக்காக மக்கள் போராடுகிறார்கள். இது ஏன்? என்று அரசு யோசிக்க வேண்டும். தந்தையை கைது செய்தால், தாய் களத்துக்கு வந்து போராடுவார். தாயை கைது செய்தால் தந்தை வந்து போராடுவார். இருவரையும் கைது செய்தால் பிள்ளைகள் போராடுவார்கள். (பலத்த கைத்தட்டல்) உரிமைக்காக சளைக்காமல் போராடுவோம். சமரசமின்றி போராடுவோம். வன்முறையற்ற அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க நடைபெறும் அறவழி போராட்டம். ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம். ஒரு தாசில்தார் கையில் குடியுரிமையை ஒவ்வொருவரும் நிருபிக்க வேண்டிய அவலத்தை இச்சட்டம் வழங்கியுள்ளது. அஸ்ஸாமில் அப்பாவி மக்களை மிரட்டி லஞ்சம் பெற்று பல அதிகாரிகள் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள். இந்த அவலம் எங்கும் வரக்கூடாது என்பதால் தான் இந்த