ஜன.20, நாகூரில், அம்பேத்கார் மக்கள் புரட்சி மன்றம் ஒருங்கிணைத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தர்கா அலங்கார வாசலில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கையில் தேசிய கொடியேந்தி போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து அடையாள தர்ணாவில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல்வேறு கட்சி, அமைப்பு , சமூக நல இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், மஹ்மூது இபுராஹீம் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 19/01/2020
Month:
மஜக சார்பாக இளையான் குடியில் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் தலைவர்கள் எழுச்சிஉரை..!
சிவகங்கை.ஜனவரி.19., மத்திய அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை சுமார் ஏழு ஆண்டுகளுக்குள் தொடர்ந்து நாட்டு மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தியும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய முத்தலாக் சட்டம், பாபர் மசூதி தீர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக தற்போது குடியுரிமை திருத்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடெங்கிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று (18.01.2020) சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடலில் நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன், அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனத் தலைவர் பி.பாலமுருகன், மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர்,
திருக்குறளை வழங்கி வள்ளுவனை போற்றிய பொங்கல் கொண்டாட்டத்தில் மஜக பங்கேற்பு!
ஜன.19, விருதுநகர் மாவட்டம், #இராஜபாளையத்தில் பகிர்வு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற திருவள்ளுவர் தினத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சிறுவர்/சிறுமியர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்புடன் நடைப்பெற்றது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகளை கையளித்தார். இந்நிகழ்வில், பங்கேற்றவர்களுக்கு திருக்குறளை வழங்கிட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து படங்கள் எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் ஒருவொருக்கொருவர் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விருதுநகர்தெற்குமாவட்டம். 17/01/2020
மாயூரம் வரலாற்று சிறப்புமிகு பேரணி ஆர்ப்பாட்டம்! நீதிமன்றத்திற்கு முன் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டு எதிர்ப்பு!!
ஜனவரி-19, மயிலாடுதுறையில், குடியுரிமை சட்டங்களுக்கெதிரான தொடர் போராட்டங்களின் நேற்று பெரும் திரளாக மக்கள் எழுச்சியோடு பங்கேற்ற பேரணியை கூட்டமைப்பு சார்பில் இரயில்வே மேம்பாலத்திலிருந்து ஹஜ்ரத் N.அப்துல் காதர் தாவூதி தொடங்கி வைக்க முடிவில் சின்னகடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக-வின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்ஷா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் N.அப்துல் ஹக்கீம் சிராஜி திருமறையுடன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். மேலும், மயிலாடுதுறை MP இராமலிங்கம், எழுத்தாளர் வே.மதிமாறன் உள்ளிட்ட பல்வேறு இயக்க, கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டன உரை நிகழ்த்திட மயிலாடுதுறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நீண்ட தேசிய கொடியோடு ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கில் மக்கள் இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன் பேரணி வந்த போது பேரணியில் பங்கேற்ற பெண்கள், சிறுவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கருப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டத்திற்கெதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். மஜக நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான்,
குடியுரிமை சட்ட அபாயங்களை விளக்கிட அனைத்து மக்களையும் சந்திப்போம்
தஞ்சை.ஜனவரி.17.., இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக எழுச்சி மாநாடு நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பனியிலும் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர். மாநாட்டில் கலைக்குழுவின் முழக்கங்களை ஆதரித்து, செல்போன் லைட்டின் வெளிச்சம் பாய்ச்சி மக்கள் தங்களிள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாலர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உ.பி.மாநில காவல்துறை, போராடிய மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறையை அரச பயங்கரவாதம் என்று சாடினார். இந்த கறுப்பு சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதை புரிய வைக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை என்றவர், இதை இந்துக்கள், கிறித்தவர்கள், தலித்துகளிடம் வீடு, வீடாக சென்று சந்தித்து விளக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வெகு மக்களையும் இதில் பங்கெடுக்க செய்ய வேண்டும் என்றும், ஏனெனில் இது இந்தியாவை பாதுகாக்க நடைபெறும், அமைதி வழியிலான இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றார். நாளை முதல் கிராமம், கிராமமாக வீதி, வீதியாக மக்களை சந்திக்க வேண்டும். அதுவே இப்போராட்டத்திற்கு இனி கூடுதல் வலு சேர்க்கும் என்றார். எமது ஜனநாயக கோரிக்கைகள் நிறைவேறும் வரை அமைதி வழி போராட்டம்