திருக்குறளை வழங்கி வள்ளுவனை போற்றிய பொங்கல் கொண்டாட்டத்தில் மஜக பங்கேற்பு!

ஜன.19,
விருதுநகர் மாவட்டம், #இராஜபாளையத்தில் பகிர்வு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற திருவள்ளுவர் தினத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சிறுவர்/சிறுமியர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்புடன் நடைப்பெற்றது.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகளை கையளித்தார்.

இந்நிகழ்வில், பங்கேற்றவர்களுக்கு திருக்குறளை வழங்கிட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து படங்கள் எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் ஒருவொருக்கொருவர் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்தெற்குமாவட்டம்.
17/01/2020